தமிழ்நாடு
தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை: வானிலை மையம் ரிப்போர்ட்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியுள்ளது. வெப்பசலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் இன்று, நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்று மட்டுமில்லாமல் அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
டெல்டா பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் மலை பிரேதேசங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தமிழ்நாடு வெதர்மேன் அறிவித்துள்ளார்.