இந்தியா
தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் சென்ற இளம்பெண்!
24 வயது இளம்பெண் ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு ஹனிமூன் செல்ல உள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது சர்வ சாதாரணமாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இதுவரை யாரும் தன்னை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு இல்லை.
இந்த நிலையில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிந்து ஷாம் என்ற 24 வயது பெண் தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வாழ விருப்பமில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் மணப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசை உள்ளது என்றும் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து பெற்றோரின் சம்மதத்துடன் அவர் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ளவுள்ளார். இவரது திருமணம் ஜூன் 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் அவரது பெற்றோர்கள் உட்பட உறவினர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது.
திருமணம் முடிந்தவுடன் இரண்டு வாரம் அவர் கோவாவுக்கு ஹனிமூன் செல்ல இருப்பதாகவும் தாலி கட்டுதல் உட்பட அனைத்து சடங்குகளையும் தனக்கு தானே செய்து கொள்ள இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முதல் முறையாக ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.