Connect with us

இந்தியா

மணமகன், மணமகள் இல்லாத ஒரு திருமணம்.. கலெக்டர் தலைமை நடத்தி வைத்த புதுமை..!

Published

on

ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் மணமகன் மற்றும் மணமகள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் திருமணம் என்பது தெரிந்ததே. தற்காலிக டெக்னாலஜி உலகில் விர்ச்சுவல் முறையில் திருமணம் நடந்தால் கூட அதில் கூட மணமகன் மணமகள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் மணமகள் மணமகள் இல்லாமல் ஒரு திருமணம் நடந்தது என்றும் அதற்கு அந்த மாவட்டத்தின் கலெக்டரே தலைமை தாங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான கிணறு ஒன்றுக்கு தான் திருமணம் என்றும் அந்த கிணற்றுக்கும் ஒரு தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை ஆட்சியர் மகேஷ் குமார் கைதல் என்பவர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் இந்த திருமணத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது..

அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என அந்த பகுதியை சேர்ந்த 85 வயது கிஷோரி தேவி என்பவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கிணற்றுக்கும் அருகில் உள்ள தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைக்க கிராமத்தினர் முடிவு செய்தனர் பத்திரிகைகள் பிரமாண்டமாக அடிக்கப்பட்டது என்பதும் நிஜத் திருமணத்திற்கு நடத்தப்படுவது போன்ற அலங்காரங்கள் இசை நிகழ்ச்சிகள் அறுசுவை வகை சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

துணை கலெக்டர் முன்னிலையில் மற்ற பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணத்தை கிஷோரி தேவி நடத்தி வைத்தார். பெண் வீட்டார் சார்பிலும் மாப்பிள்ளை வீட்டார் சார்பிலும் நடத்த வேண்டிய சடங்குகளும் நடத்தப்பட்டன. இந்த திருமணத்திற்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது என்பதும் அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு கிணற்றையும் தோட்டத்தையும் வாழ்த்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் காரணமாக இனி கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கை உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

author avatar
seithichurul
தினபலன்3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்13 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்17 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா17 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்17 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

சினிமா18 மணி நேரங்கள் ago

தனுஷின் ராயன்: ரசிகர்களுடன் கண்ணீர் மழை! 50வது பட வெற்றி விழா!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

ஆரோக்கியம்7 நாட்கள் ago

நாம் ஒரு நாளைக்கு எத்தனை நிமிடங்கள் வரை பல் துலக்க வேண்டும் தெரியுமா?

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!