Connect with us

இந்தியா

மணமகன், மணமகள் இல்லாத ஒரு திருமணம்.. கலெக்டர் தலைமை நடத்தி வைத்த புதுமை..!

Published

on

ஒரு திருமணம் என்றால் அந்த திருமணத்தில் யார் வந்தாலும் வராவிட்டாலும் மணமகன் மற்றும் மணமகள் கண்டிப்பாக இருப்பார்கள் என்பதும் இதுதான் காலம் காலமாக நடந்து வரும் திருமணம் என்பது தெரிந்ததே. தற்காலிக டெக்னாலஜி உலகில் விர்ச்சுவல் முறையில் திருமணம் நடந்தால் கூட அதில் கூட மணமகன் மணமகள் இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் உத்திரபிரதேசம் மாநிலத்தில் மணமகள் மணமகள் இல்லாமல் ஒரு திருமணம் நடந்தது என்றும் அதற்கு அந்த மாவட்டத்தின் கலெக்டரே தலைமை தாங்கி உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பழமையான கிணறு ஒன்றுக்கு தான் திருமணம் என்றும் அந்த கிணற்றுக்கும் ஒரு தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துணை ஆட்சியர் மகேஷ் குமார் கைதல் என்பவர் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் இந்த திருமணத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் பிரபலங்களும் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது..

அந்த பகுதியில் உள்ள கிராமங்கள் கடந்த சில வருடங்களாக வறட்சியுடன் இருப்பதாகவும் அந்த கிணற்றில் தண்ணீர் வறண்டு போனதால் விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது கெட்ட சகுனமாக பார்க்கப்பட்ட நிலையில் அந்த கிணற்றுக்கு திருமணம் செய்து வைத்தால் கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என அந்த பகுதியை சேர்ந்த 85 வயது கிஷோரி தேவி என்பவர் கூறியுள்ளார்.

இதனை அடுத்து கிணற்றுக்கும் அருகில் உள்ள தோட்டத்திற்கும் திருமணம் செய்து வைக்க கிராமத்தினர் முடிவு செய்தனர் பத்திரிகைகள் பிரமாண்டமாக அடிக்கப்பட்டது என்பதும் நிஜத் திருமணத்திற்கு நடத்தப்படுவது போன்ற அலங்காரங்கள் இசை நிகழ்ச்சிகள் அறுசுவை வகை சாப்பாடு ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டன.

துணை கலெக்டர் முன்னிலையில் மற்ற பிரபலங்கள் முன்னிலையில் இந்த திருமணத்தை கிஷோரி தேவி நடத்தி வைத்தார். பெண் வீட்டார் சார்பிலும் மாப்பிள்ளை வீட்டார் சார்பிலும் நடத்த வேண்டிய சடங்குகளும் நடத்தப்பட்டன. இந்த திருமணத்திற்கு பிறகு வந்திருந்த அனைவருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது என்பதும் அனைவரும் திருப்தியுடன் சாப்பிட்டு விட்டு கிணற்றையும் தோட்டத்தையும் வாழ்த்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திருமணம் காரணமாக இனி கிணற்றில் தண்ணீர் வந்துவிடும் என்ற நம்பிக்கை அந்த கிராம மக்களுக்கு உள்ளது. அந்த நம்பிக்கை உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சினிமா செய்திகள்3 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்4 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்4 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்5 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா7 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு8 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized9 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு11 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா13 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு13 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு4 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!