செய்திகள்
தமிழத்தில் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு – அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தினசரி பாதிப்பு 2 மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக 750ஆக இருந்து வந்தது. ஆனால், தற்போது இது பல மடங்காக அதிகரித்துள்ளது.
நேற்று ஒரு நாளில் கொரோனா பாதிப்பு 2731 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பரவல் இரட்டிப்பாகி உள்ளது. அங்கு மட்டும் நேற்று ஒரு நாளில் 1489 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த சில நாட்களாகவே முதல்வர் ஸ்டாலின் இதுபற்றிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரங்கு அமுல்படுத்தப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். மேலும், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

















