தமிழ்நாடு
கஜா புயல் பாதிப்பு.. முதல்வரிடம் ரூ.10 லட்சத்துக்கனகான காசோலை வழங்கிய தொல். திருமாவளவன்!
கஜா புயல் நிவாரண நிதிக்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை, இன்று முகாம் அலுவலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்து, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். #GajaCycloneRelief pic.twitter.com/DxQ7Gk5Hy5
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 23, 2018
கஜா புயல் திருவாரூர், தஞ்சய், உள்ளிட்ட 7 மாவட்டங்களைப் பெறும் அளவில் பாதித்துள்ள நிலையில் முதல்வர் புயல் நிவாரண நிதிக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை நேரல் சந்தித்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில் கஜா புயல் பாதிக்கப்பட்ட மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைப்பிற்குச் சென்று ஆன்லைன் வழியாக நிதிய செலுத்தலாம்.