Connect with us

தமிழ்நாடு

இரவு நேரங்களில் மட்டுமே சாலையோர தூய்மைப் பணி: சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

சென்னை மாநகராட்சியில் இனி போக்குவரத்துக்கு இடையூறு வராத வகையில் சாலையோர தூய்மை பணியில் நடத்தப்படும் என்றும் அந்த வகையில் இனிய இரவு நேரங்களில் கூடுதல் ஊழியர்கள் மற்றும் கூடுதல் வாகனங்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ போக்குவரத்து இடையூறு ஏற்படுவதை தவிர்குகும்‌ பொருட்டு கூடுதல்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களின்‌ மூலம்‌ இரவு நேரங்களில்‌ தூய்மைப்‌ பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 கோட்டங்களிலும்‌ திடக்கழிவு மேலாண்மைத்துறை சார்பாக தினந்தோறும்‌ சுமார்‌ 5,000 மெட்ரிக்‌ டன்‌ குப்பைகள்‌ சேகரிக்கப்பட்டு அப்புறபடுத்தப்பட்டு வருகின்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ உத்தரவின்படி மாண்புமிகு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்‌ அவர்கள்‌ அனைத்து பேருந்து சாலைகள்‌ மற்றும் உட்புறச்‌ சாலைகளிலும்‌ தூய்மை பணியினை தீவிரபடுத்த அறிவுறுத்தியுள்ளார்கள்‌.

பெருநகர சென்னை மாநகராட்‌ சிக்குட்பட்ட பகுதிகளில்‌ 38 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள 471 பேருந்து சாலைகளும்‌, 5,270 கிலோ மீட்டர்‌ நீளமுள்ள 34,640 உட்புற சாலைகளும்‌ உள்ளன. இந்த சாலைகளில்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ தூய்மை பணிகள்‌ நாள்தோறும்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும்‌ மாநகரின்‌ 200 வார்டுகளிலும்‌ சேகரிக்கப்படும்‌ சுமார்‌ 5000 மெட்ரிக்‌ டன் அளவிலான குப்பைகள்‌ பல்வேறு வகையான வாகனங்களைக்‌ கொண்டு குப்பைகளை கையாளும்‌ மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. சாலைகளில்‌ தூய்மைப்‌ பணிகள்‌ பகலில்‌ மேற்கொள்ளப்படும்‌ பொழுதும்‌, குப்பைகள்‌ அகற்றப்படும்‌ பொழுதும்‌ பேருந்து மற்றும்‌ உட்புற சாலைகளில்‌ பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறுகள்‌ ஏற்படுகின்றன.

இதனை கருத்தில்‌ கொண்டு பேருந்து சாலைகளிலும்‌, உட்புற சாலைகளிலும்‌ மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மற்றும்‌ தூய்மை பணி மேற்கொள்ளும்‌ தனியார்‌ நிறுவனங்களின்‌ சார்பில்‌ இரவு நேரங்களில்‌ தூய்மை பணிகள்‌ தீவிரமாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்பொழுது தூய்மை பணிகள்‌ மேற்கொள்ளும்‌ பொழுது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதை முற்றிலும்‌ தவிர்க்கும்‌ வண்ணம்‌ மாநகராட்சியின்‌ திடக்கழிவு மேலாண்மை துறையின்‌ மூலம்‌ பேட்டரியால்‌ இயங்கும்‌ 255 வாகனங்கள்‌, 53 மூன்று சக்கர வாகனங்கள்‌, 147 கம்பாக்டர்‌ வாகனங்கள்‌, 50 மெக்கானிக்கல்‌ ஸ்வீப்பர்‌ வாகனங்கள்‌, 23 டிப்பர்‌ லாரிகளும்‌ மற்றும்‌ 1786. தூய்மைப்‌ பணியாளர்களும்‌ பலசியமர்த்தப்பட்டு பணிகள்‌ முடுக்கிவிடப்பட்டுள்ளன.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில்‌ உள்ள சாலைகளில்‌ கூடுதல்‌ வாகனங்கள்‌ மற்றும்‌ பணியாளர்களை கொண்டு அனைத்து தூய்மை பணிகளையும்‌ இரவு நேரங்களிலேயே முடித்து பொதுமக்களின்‌ போக்குவரத்திற்கு எவ்வித இடையூறுமின்றி பணிகளை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

மத்திய அரசு ஊழியர்களுக்கு டிஏ உயர்வு 2026: 60% வரை ஏற்றம், அரியர்ஸ் எப்போது? முழு விவரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தொடக்கம் – அதிர்ஷ்டம் உச்சத்தில்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மேஷ ராசியில் சூரியன் பெயர்ச்சி 2026: இன்று முதல் இந்த 6 ராசிகளுக்கு பொற்காலம் தொடக்கம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 16 ஏப்ரல் 2026: திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகு காலம் முழு விவரம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 16 ஏப்ரல் 2026: 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள் – வேலை, பணம், குடும்ப நிலை எப்படி?

வணிகம்13 மணி நேரங்கள் ago

8வது ஊதிய கமிஷன்: குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆக உயருமா? முக்கிய பரிந்துரைகள் வெளியீடு!

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

மே 11 கிரக சேர்க்கை 2026: சூரியன்-செவ்வாய் இணைப்பு – 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம்!

வேலைவாய்ப்பு13 மணி நேரங்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

இந்தியா6 நாட்கள் ago

ஜனநாயகன் படத்தை பதிவிறக்கம் செய்பவர்கள் மற்றும் பகிர்வோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

பஞ்சாப் & சிந்து வங்கி வேலைவாய்ப்பு 2026: 1000 Local Bank Officer பணிகள் – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்க!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

இந்தியா6 நாட்கள் ago

G Pay யில் “Pocket Money” என்பது தற்போதைய UPI Circle போன்ற ஒரு புதிய அம்சமாகும்.

இந்தியா6 நாட்கள் ago

ஜப்பானியர்களின் அசத்தல் கண்டுபிடிப்பு – முதியவர்கள் கீழே விழுவதைத் தடுக்கும் ரோபோட்டிக் வால்

வணிகம்6 நாட்கள் ago

11 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என ஆசையில் ரூ.12.31 கோடி இழந்த மருத்துவர் சைபர் மோசடி அதிர்ச்சி

இந்தியா5 நாட்கள் ago

நமக்கு வரும்; மெசேஜ் இன்பாக்சில் இவற்றின் ரகசியம் உங்களுக்குத் தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

ரயிலில் தேநீர் அதிக விலைக்கு விற்ற சம்பவம் வைரல்: IRCTC கடும் நடவடிக்கை

Translate »
Te uchwały, zarówno rady nadzorczej. ??. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.