Connect with us

இந்தியா

25,000 இலவச டோக்கன்களை வாங்க குவிந்த 50,000 பக்தர்கள்: திருப்பதியில் பலர் படுகாயம்!

Published

on

திருப்பதியில் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்களை பெற 50 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்ததால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

திருப்பதியில் கடந்த சில நாட்களாக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் மட்டுமே தரப்படுகின்றன. இந்த நிலையில் நாளைய தரிசனத்திற்கான 25 ஆயிரம் இன்று தரப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்காக ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் டோக்கன் கவுண்டர்களில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் காயமடைந்ததாகவும் அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை அடுத்து இன்றைய இலவச தரிசன டோக்கன்கள் காலியாகி விட்டது என்றும் நாளை மறுநாள் தரிசனத்திற்கான டோக்கன்கள் நாளை காலை வழங்கப்படும் என்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறினர். இதனால் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இலவச தரிசன டோக்கன்களை முழுக்க முழுக்க ஆன்லைனில் வழங்கப்பட்டால் இந்த பிரச்சனை இருக்காது என்றும் நேரடியாக இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?