செய்திகள்
ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!
Published
21 minutes agoon
By
Poovizhi
தமிழகத்தில் ரேஷன் கார்டு தொடர்பான முறைகேடுகளை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா ரேஷன் கார்டுகளில் இருந்து பெயரை நீக்கும் செயல்முறையில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தற்போது 2.27 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதில் 18.65 லட்சம் பேர் அந்தியோதயா திட்டத்திலும், 1.17 கோடி பேர் முன்னுரிமை ரேஷன் கார்டு திட்டத்திலும் இடம்பெற்றுள்ளனர். இந்த இரு பிரிவினருக்கும் மத்திய அரசு இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.
ஆனால், சிலர் பழைய ரேஷன் கார்டில் இலவச பொருட்களை பெற்ற உடனே, அதிலிருந்து தங்களது பெயரை நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து, மீண்டும் இலவச பொருட்களை பெற்று வந்ததாக புகார்கள் எழுந்தன. இதனால் திட்டத்தில் முறைகேடுகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஒரே நபர் இரண்டு ரேஷன் கார்டுகளின் மூலம் பயனடைவதை தடுக்க மத்திய அரசு புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர், ஏற்கனவே வேறு எந்த ரேஷன் கார்டிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற நிபந்தனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பெயரை நீக்க விரும்புபவர்கள், பொது வினியோகத் திட்டத்தின் (PDS) அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அதிகாரிகள் விண்ணப்பத்தை ஆய்வு செய்து, தேவையான ஆவணங்களை சரிபார்த்து பெயர் நீக்கும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள்.
மேலும், பெயர் நீக்கம் தொடர்பான இறுதி ஒப்புதல் ஒவ்வொரு மாத இறுதியிலும் மத்திய அரசின் அனுமதி கிடைத்த பின் மட்டுமே அமலுக்கு வரும். மாதத்தின் எந்த தேதியில் விண்ணப்பித்தாலும், உடனடியாக பெயர் நீக்கம் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பெயர் நீக்கம் உறுதிசெய்யப்பட்டதும், அதுகுறித்த தகவல் விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் அனுப்பப்படும். அந்த தகவலை பெற்ற பிறகே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அந்தியோதயா ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதம் 35 கிலோ அரிசியும், முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு ஒருவருக்கு 5 கிலோ அரிசியும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நலத்திட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட்: ஏப்ரலில் 3 மாதங்களுக்கு ஒரே நேரத்தில் உணவுத் தானியம்!

ரேஷன் கார்டில் ஆதார் OTP மூலம் பெயர் சேர்க்கும் புதிய முறை – தமிழ்நாடு அரசு டிஜிட்டல் அப்டேட்!

ரேஷன் கார்டு வைத்துள்ள முதியோருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் – சென்னை பகுதிகளுக்கான தேதிகள் அறிவிப்பு!

Tamil Nadu LIVE Updates: இன்று நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள், ரேஷன் கார்டு, மகளிர் உரிமைத் தொகை, ஓய்வூதியம் மற்றும் 8வது ஊதியக்குழு முக்கிய அறிவிப்புகள்!

ரேஷன் கார்டு மாற்றம்: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு – பொருளில்லா அட்டைக்கு மாற்றுவது எப்படி?












