இந்தியா
17 வயது சிறுமியுடன் முதலிரவு… வீடியோ எடுத்ததால் கம்பி எண்ணும் புதுமாப்பிள்ளை!
ஆந்திராவில் 17 வயது சிறுமியை வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்த ஒருவர் அவர்களின் முதலிரவு காட்சியை யாருக்கும் தெரியாமல் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆந்திர மாநிலம் அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தை சேர்ந்தவர் வீரபாபு. இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த மாதம் 8-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து தம்பதியினருக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலிரவில் போன காரியத்தை மட்டும் பார்க்காமல் புதுமாப்பிள்ளை தனது மனைவியுடன் இருக்கும் முதலிரவு காட்சிகளை அவருக்கு தெரியாமல் செல்ஃபோனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
அத்தோடு நிறுத்தாமல் அந்த வீடியோவை கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் வாட்ஸ் அப் குரூப்பில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ந்துபோன பெண் வீட்டார் ஆத்திரமடைந்து புதுமாப்பிள்ளையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாப்பிள்ளை வீட்டார் சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
ஆனால் சமாதான முயற்சி பலனளிக்காத நிலையில் சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுமாப்பிள்ளையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தற்போது சிறையில் அடைத்துள்ளனர்.