உலகம்
மீண்டும் முடங்கியது பேஸ்புக், இன்ஸ்டாகிராம்: பயனர்கள் அதிர்ச்சி
கடந்த அக்டோபர் மாதம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் திடீரென முடங்கியதால் பெரும் அவதி ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என்று மாற்றப்பட்ட நிலையில் முதல் முறையாக நேற்று பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள் சுமார் ஒரு மணி நேரமாக செயல் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கோடிக்கணக்கான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த அக்டோபர் மாதம் 6 மணி நேரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கிய நிலையில் தற்போது மீண்டும் முடங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதாகவும் அதனை அடுத்து மீண்டும் தங்கள் பதிவுகளை பயனர்கள் தற்போது அப்லோடு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு மணி நேரம் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயல்படாமல் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறு மீண்டும் வராதவாறு பார்த்துக் கொள்ளப்படும் என பேஸ்புக் நிறுவனம் பயனர்களுக்கு உறுதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.