Connect with us

இந்தியா

இனி தினமும் 25 ஆயிரம் தரிசன டிக்கெட்டுக்கள்: திருப்பதி தேவஸ்தானம் தகவல்!

Published

on

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய இதுவரை 15 ஆயிரம் டிக்கெட்டுகள் மட்டுமே தந்து கொண்டிருக்கும் நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் தினசரி 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ள நிலையில் டிக்கெட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க திருமலை தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது/ அதன்படி நாளை முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தினமும் 13,000 டிக்கெட் வீதம் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்றும் இந்த டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி முதல் தேவஸ்தான இணையதளத்தில் ஆன்லைன் மூலம் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருப்பதியில் உள்ள பூ தேவி காம்ப்ளக்ஸ், ஸ்ரீனிவாசம், கோவிந்த ராஜ ஸ்வாமிகள் பக்தர்கள் தங்கும் விடுதிகளில் தினமும் 15 ஆயிரம் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும் என்றும் இந்த டோக்கன்கள் பெற்றவர்கள் பிப்ரவரி 26, 27, 28ம் தேதிகளில் தரிசனம் செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 5,000 டோக்கன்கள் என மொத்தம் 20,000 டோக்கன்கள் வழங்கப்பட உள்ளதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மார்ச் 1ஆம் தேதி முதல் ரூபாய் 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினசரி 25 ஆயிரம் தரப்படும் என்றும் இந்த டிக்கெட்டுகள் இன்று காலை 9 மணி முதல் திருப்பதி திருமலை தேவஸ்தான இணையதளத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?