தமிழ்நாடு
பள்ளிக்கு வராத மாணவர்கள் தவிர அனைவரும் பாஸ்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
பள்ளிக்கு வராத மாணவ மாணவிகள் தவிர ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்தது என்பதும் தற்போது கோடை விடுமுறை அளிக்கப் பட்டுள்ள நிலையில் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 2021 – 22 கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை இறுதி தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆனால் அதே நேரத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.