Connect with us

தமிழ்நாடு

கள்ளச் சாராயம் விற்றால் குண்டர் சட்டம் பாயும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

Published

on

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தை அடுத்துள்ள எக்கியார்குப்பத்தில், விஷ சாராயத்தை குடித்து இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். மேலும், 58 பேர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

காவல் துறையினர் அதிரடி

கள்ளச் சாராயம் பிரச்சனை தமிழ்நாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் சோதனை நடத்தி கள்ளச் சாராயம் தயாரிப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவார்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுவிலக்குத் துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்

  • கள்ளச் சாராயத்தை தடுப்பதற்க, மாவட்ட அளவில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும்.
  • கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • மதுவிலக்கு குறித்து தகவல் அளிக்க 10581 என்ற எண் பயன்பாட்டில் உள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
  • மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத் துறை அதிகாரிகளின் வீடுகளில், வாட்ஸ் அப் எண்களை பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
  • கள்ளச் சாராய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, மிகச் சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் நியமிக்க வேண்டும்.
  • தொழிற்சாலைகளில் மெத்தனால் மற்றும் எரிசாராயம் பயன்பாட்டை கவனிக்க வேண்டும்.
  • விஷச் சாராயம் காய்ச்சுவதற்கு மெத்தனாலை பயன்படுத்தாமல் இருப்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
  • கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது, பாரபட்சமின்றி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?