Connect with us

தமிழ்நாடு

காந்தியை காட்டிலும் பொறுமை காத்தவர் எடப்பாடி பழனிசாமி: செல்லூர் ராஜூ

Published

on

நேற்று முன்தினம் மதுரை வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விமான நிலையத்தில் வைத்து வீடியோ எடுத்து துரோகத்தின் அடையாளம் எடப்பாடி என கோஷமிட்ட அமமுக நிர்வாகியின் செல்ஃபோனை பறித்து அதிமுகவினர் தாக்கினர். இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எடப்பாடி பழனிசாமி காந்தியை விட மேலானவர் என பாராட்டியுள்ளார்.

#image_title

சிவகங்கையில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள விமானம் மூலம் மதுரை வந்தார் எடப்பாடி பழனிசாமி. அப்போது அங்கு வந்த அமமுக நிர்வாகி ராஜேஸ்வரன், எடப்பாடி பழனிசாமியை பார்த்து ஆத்திரமடைந்து, அவருக்கு எதிராக கோஷமிட்டு வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் லைவ் செய்தார். இதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரிடம் இருந்த செல்ஃபோனை பறித்தார்.

முன்னதாக அந்த வீடியோவில், எல்லோரும் பார்த்துக் கொள்ளுங்கள். நம்முடன் போய்க்கொண்டு இருப்பது எதிர்க்கட்சித் தலைவர், துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் நான் பயணித்துக் கொண்டு உள்ளேன். அண்ணன் எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்; சசிகலாவிற்கு துரோகத்தை பண்ணியவர். 10.5% இடஒதுக்கீட்டை தென்நாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர் என பேசினார்.

இந்த சம்பவத்துக்கு பின்னர் அவரை அதிமுகவினர் தாக்கினர். இதனையடுத்து இரு தரப்பினரும் மாறி மாறி புகார் அளித்ததின் பேரில் எடப்பாடி பழனிசாமி உட்பட இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இணையத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில், நேற்று மதுரையில் நடந்த அதிமுக கட்சிக் கூட்டத்தில் இந்த சம்பவம் குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு முன்னாள் முதலமைச்சர், மக்களால் மதிக்கக்கூடிய தலைவரை, ஒருமையில் ஒருவர் பேசுகிறார். அவர் சுயநினைவோடு இல்லை. மது அருந்தியிருக்கிறார். அரை போதையில் விமான நிலைய பேருந்தில் கம்பியைப் பிடித்துக்கொண்டு, பேசக் கூடாத வார்த்தையைப் பேசுகிறார். அண்ணனுடைய பெயரைச் சொல்லி பேசுகிறார். துரோகி என்று பேசுகிறார். திரும்பத் திரும்பப் பேசுகிறார். யாராக இருந்தாலும், ஏன் காந்தியாக இருந்தாலும் அடித்திருப்பார். காந்தியை காட்டிலும் பொறுமை காத்தவர் எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றார்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?