தமிழ்நாடு
ஆரம்பமே சிங்கப்பாதை.. பொதுச்செயலாளர் ஆன உடனேயே எடப்பாடி போட்ட பரபர ஆர்டர்!

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் வென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டு உள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டு உள்ளது. அதாவது ஜூலை 11ம் தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் நடந்ததும் செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து இன்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வானார்.
அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆன பின் சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அதிமுகவிற்கு புதிய உறுப்பினர்களை உடனடியாக சேர்ப்பது செய்வது தொடர்பாக அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிக்கையில், புதிய உறுப்பினர் விண்ணப்பப் படிவங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களுடைய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை புதுப்பிக்க வேண்டும் என்ற கழக சட்ட திட்ட விதிமுறைப்படி, கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்த்திடும் வகையிலும், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள் வருகின்ற 5.4.2023 – புதன் கிழமை முதல் தலைமைக் கழகத்தில் விநியோகிக்கப்படும்.
கழக உடன்பிறப்புகள், புதிய உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று அதனை பூர்த்தி செய்து, ஒரு உறுப்பினருக்கு ரூ. 10/- வீதம் தலைமைக் கழகத்தில் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று குறிப்பிட்டு உள்ளார்.
கட்சி கட்டுப்பாட்டிற்கு வந்த உடனேயே உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.