Connect with us

தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் மனுக்கள் ஏற்பு: அண்ணாமலை வேட்புமனு நிறுத்திவைப்பு!

Published

on

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட மொத்தம் 5002 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது வந்துள்ள தகவலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் அவரது வேட்புமனு ஏற்கப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் வேட்புமனுவும், கோவில்பட்டியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவும் ஏற்பு என தகவல் வெளிவந்துள்ளது.

Annamalaiஇந்த நிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதை அவர் தனது வேட்புமனுவில் மறைத்துள்ளதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் பாஜக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?