Connect with us

தமிழ்நாடு

சென்னையில் வீட்டுக்கே வரும் தடுப்பூசி: மாநகராட்சி அறிவிப்பு!

Published

on

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தும் வகையில் அவர்களின் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்‌ வசிக்கும்‌ 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அவர்களின்‌ கருப்பிடங்களுக்கே சென்று கோவிட்‌ தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ கோவிட்‌ தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும்‌, தொற்று பரவலை கட்டுப்படுத்தவும்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்கள்‌ தமிழக மக்கள்‌ அனைவருக்கும்‌ கோவிட்‌ தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்‌ என உத்தரவிட்டுள்ளார்கள்‌. அதனடிப்படையில்‌, தமிழக அரசு கொரோனா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள்‌, சுகாதார நிலையங்கள்‌ மற்றும்‌ தடுப்பூசி சிறப்பு முகாம்கள்‌ மூலம்‌ செலுத்தி வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ உள்ள மாற்றுத்திறனாளிகள்‌, உயர்‌ இரத்த அழுத்தம்‌ மற்றும்‌ நீரிழிவு நோயினால்‌ பாதிக்கப்பட்டுள்ள நபர்கள்‌, கர்ப்பிணி தாய்மார்கள்‌, பாலூட்டும்‌ பெண்கள்‌ மற்றும்‌ காசநோய்‌ பாதித்த நபர்களை பாதுகாக்கும்‌ வகையில்‌ மாநகராட்சியின்‌ சார்பில்‌ சிறப்பு கவணம்‌ செலுத்தப்பட்டு அரசின்‌ வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டு வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ இதுநாள்‌ வரை 254228 நபர்களுக்கு முதல்‌ தவணை தடுப்பூசியும்‌, 10,54,704 நபர்களுக்கு இரண்டாம்‌ தவணை தடுப்பூசியும்‌ என மொத்தம்‌ 35,68,932 கோவிட்‌ தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டுள்ளன.

மேலும்‌, குடிசைப்‌ பகுதிகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்களுக்கு சிறப்பு கவனம்‌ செலுத்தி தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, 13.08.2021 முதல்‌ ஒரு வாரக்‌ காலத்தில்‌ 315 கோவிட்‌ சிறப்பு தடுப்பூசி முகாம்கள்‌ நடத்தப்பட்டு 24,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதனைத்‌ தொடர்ந்து, 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கோவிட்‌ தடுப்பூசி செலுத்தும்‌ வகையில்‌ அவர்களின்‌ ஒருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த தற்பொழுது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனடிப்படையில்‌, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்‌ உள்ள 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கோவிட்‌ தடுப்பூசி செலுத்த 044-2538 4520 மற்றும்‌ 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களில்‌ தொடர்பு கொண்டு முன்பதிவு செய்தால்‌, அவர்களின்‌ இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்‌.

இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்16 minutes ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்19 minutes ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்22 minutes ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்26 minutes ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

ஆன்மீகம்35 minutes ago

ஜூன் 8-ல் இரட்டை பெயர்ச்சி: சூரியன் – சுக்கிரன் இணை மாற்றத்தால் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும் செல்வமும் குவியும்!

வணிகம்40 minutes ago

DA உயர்வு 2026: அகவிலைப்படி 63% ஆக உயருமா? மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

ஆன்மீகம்60 minutes ago

ஜூன் 8-ல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிகளுக்கு செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் வெற்றியின் பொற்காலம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: பூச நட்சத்திரத்தில் குரு பிரவேசம் – இந்த 4 ராசிகளுக்கு ஜூன் 18 முதல் பொற்காலம் தொடக்கம்!

வணிகம்1 மணி நேரம் ago

8வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு அதிரடி சம்பள உயர்வா? புதிய ஃபிட்மென்ட் ஃபாக்டர் பரிந்துரையின் முழு விவரம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

ஒரே நேரத்தில் ராசி மற்றும் நட்சத்திரத்தை கடக்கும் சந்திரன்: இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பெய்யப் போகிறது!

vinod
சினிமா செய்திகள்5 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

இந்தியா3 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

ஆன்மீகம்3 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

சினிமா செய்திகள்5 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா3 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் மிகச் சிறிய நதி எது தெரியுமா? வெறும் 45 கி.மீ. நீளம்தான்… ஆனால் அதன் பின்னால் ஒரு ஆச்சரியமான கதை!

வணிகம்4 நாட்கள் ago

ஜூன் 1 முதல் அமலுக்கு வந்த 6 முக்கிய மாற்றங்கள்: LPG விலை, UPI விதிகள், PAN, கார் விலை உயர்வு – முழு விவரம்!

கட்டுரைகள்2 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

Translate »
Nordicnodes | professional saas tools for everyone.