சினிமா செய்திகள்
நடிகை மஞ்சுவாரியருக்கு ஆபத்து என கூறிய இயக்குனர் கைது!
மஞ்சு வாரியாருக்கு ஆபத்து என்றும் அவர் ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தனது பேஸ்புக்கில் பதிவு செய்த இயக்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
தமிழில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படத்திலும் மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை மஞ்சுவாரியார். இவர் பிரபல மலையாள நடிகர் திலீப் குமாரின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மலையாள இயக்குனர் சனல்குமார் என்பவர் மஞ்சுவாரியரின் உயிருக்கு ஆபத்து என்றும் அவர் ஒரு சிலரின் கட்டுக்குள் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும் தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.
இது குறித்து மஞ்சு வாரியர் காவல் துறையில் புகார் அளித்து உள்ளார். தன்னை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் அவமானபடுத்தி வருவதாகவும் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், அதுமட்டுமின்றி தான் போகும் இடத்திற்கெல்லாம் தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சனல்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டதை ஃபேஸ்புக்கில் லைவ்வில் சனல்குமார் ஒளிபரப்பு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.