தமிழ்நாடு
பாலியல் அத்துமீறல், உல்லாசம்… பாதிரியார் பெனடிக் ஆன்றோ அதிரடி கைது!

பெண்களிடம் ஆபாசமாக, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சர்ச்சை இளம் பாதிரியார் பெனடிக் ஆன்றோ இன்று அதிரடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

#image_title
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த பெனடிக் ஆன்றோ பிலாங்காலை பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். இவர் தேவாலயத்துக்கு வரும் பல இளம் பெண்களிடம் வாட்சப் சாட் மற்றும் வீடியோ காலில் ஆபாசமாக பழகி வந்துள்ளார். மேலும் பல பெண்களிடம் பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பான பல ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், வாட்சப் சாட்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது ஆஸ்டின் ஜினோ என்பவர் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
இதனையடுத்து ஆபாச பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த பாதிரியாரை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் அவரை நாகர்கோவில் பால்பண்னை பகுதியில் காரில் தப்பித்துசெல்ல முயன்றபோது மடக்கி பிடித்து அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வரலாம் என நம்பப்படுகிறது.