Connect with us

சினிமா

“‘பத்து தல’ படத்தை கைவிட முடிவு செய்தோம்”- இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா!

Published

on

‘பத்து தல’ படத்தின இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் இயக்குநர் ஓபிலி கிருஷ்ணா பேசியதாவது, “‘பத்து தல’ படத்தின் வாய்ப்பைக் கொடுத்தது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். ஆனால், சூழ்நிலை காரணமாக இந்த படத்தை கைவிட வேண்டிய நிலையில் இருந்தது. கௌதம் கார்த்திக் உடைய போர்ஷன் அனைத்தையும் முடித்து விட்டோம். சிம்பு அடுத்த ஷெட்யூலுக்காக தயாராகி கொண்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில் நியாயமான காரணங்களால் படத்தை கைவிட வேண்டிய நிலையில் யாரிடமும் சொல்ல முடியாமல் குழப்பத்தில் இருந்தோம். ஏற்கனவே என்னுடைய இரண்டு படங்கள் கைவிடப்பட்டு விட்டது.

அதேபோலவே இந்த படமும் கைவிட்டால் எனக்கும் மிகப்பெரிய இழப்புதான். சினிமாவில் அதிகம் சென்டிமென்ட் பார்ப்பார்கள். பிறகு ஞானவேல் ராஜாவிடம் நான் பேசினேன். ஒரு முடிவை எடுத்தால் அதை மாற்றாதவர் ஞானவேல் ராஜா. ஆனால் அந்த பத்து நிமிடங்கள் அவர் மனதை மாற்றியது எது என தெரியவில்லை. இது அனைத்தும் கடவுளின் அருள்தான் நேற்று கூட டிரைய்லரை முடித்து விட்டு ரஹ்மான் சாரிடம் கேட்டேன். அவர் செய்துவிடலாம் என பாசிட்டிவாக பேசி செய்து கொடுத்திருக்கிறார்.

எஸ் டி ஆர்- ஐ பற்றி பேச வேண்டும் என்றால் அவருடைய நண்பராக நான் சொல்கிறேன். எனக்கும் அவருக்கும் 20 வருட பழக்கம். அவருடைய ‘தம்’ படத்திற்கு பிறகு நான் படம் இயக்க வேண்டியது. அது தள்ளி போய் இப்போது தான் நடந்திருக்கிறது. படப்பிடிப்பில் மிகவும் தயாராக இருப்பார். வசனங்களை முந்தின நாள் இரவே வாங்கி படித்துவிட்டு ஸ்பாட்டுக்கு வருவார்.

என் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அந்த விஷயம்தான் இந்தப் படத்தை நான் நினைத்ததுபோல எடுக்க வைத்தது. கெளதம் கார்த்திக்கை நான் நிறைய படுத்தி இருக்கிறேன். ஆனாலும் அவ்வளவு பொறுமையாக இருப்பார். ரஹ்மான் சார் பற்றி நான் பேச வேண்டும் என்றால் நிறைய கதைகள் இருக்கிறது. அவரைப் பார்த்து நிறைய விஷயங்கள் நான் மாறி இருக்கிறேன். நன்றி சார்”.

 

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்6 mins ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா2 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு4 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized5 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு6 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா8 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு9 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

இந்தியா10 hours ago

படிப்பறிவு குறைந்தவர் பிரதமராக இருப்பது ஆபத்து: அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி!

சினிமா11 hours ago

விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் மணிகண்டன் கூட்டணியில் வெப் சீரிஸ் அறிவிப்பு

வணிகம்11 hours ago

தங்கம் விலை சரிவு(01/04/2023)!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு2 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!