தமிழ்நாடு
10ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டர் கைது!
பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவியை கர்ப்பமாக்கிய டான்ஸ் மாஸ்டரை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே டான்ஸ் மாஸ்டர் சரவணன் என்பவர் பள்ளி ஆண்டு விழாவுக்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுத்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பழக்கமாகி காதல் மலர்ந்துள்ளது.
இந்த நிலையில் திடீரென பத்தாம் வகுப்பு மாணவியை சரவணன் அழைத்துக்கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் இருவரையும் தேடி வந்த நிலையில் இருவரையும் கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்து வந்தனர் .
விசாரணையில் டான்ஸ் சொல்லிக் கொடுக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து மாணவியின் அடிக்கடி வீட்டிற்கு சென்று பத்தாம் வகுப்பு மாணவியுடன் சரவணன் உறவு கொண்டு இருப்பதாகவும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது சிறுமி கர்ப்பம் அடைந்திருப்பதாக தெரியவந்துள்ளதை அடுத்து 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சரவணன் மீது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சேலம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட எடுத்து சரவணனை சிறையில் அடைத்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை சேலத்தில் உள்ள காப்போம் ஒன்றுக்கு போலீசார் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளன.