உலகம்
திருமணமாகாமல் குழந்தைகள் பெற்ற ரொனோல்டா சவுதியில் வாழ முடியுமா? சட்டம் என்ன சொல்கிறது?
உலகப் புகழ்பெற்ற ரொனோல்டா தற்போது சவுதி அரேபிய அணியில் விளையாட இருக்கும் நிலையில் சவுதி அரேபியாவில் திருமணம் செய்யாத தம்பதிகள் ஒன்றாக ஒரே அறையில் தங்க சட்டம் இடம் தராது என்பதால் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் என்ற அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு இந்திய மதிப்பில் 1700 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சவுதி அரேபிய அணிக்காக அவர் தொடர்ச்சியாக இரண்டரை ஆண்டுகாலம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் சட்டப்படி திருமணம் செய்யாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்க அனுமதி இல்லை. ஆனால் ரொனால்டோ தனது காதலி ஜார்ஜினாவுடன் திருமணம் செய்யாமல் உறவில் இருக்கிறார் என்பதும் இந்த ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் அவர் தனது காதலி மற்றும் குழந்தையுடன் தங்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இது குறித்து சவுதி அரேபியா அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சவுதி அரேபியாவின் சட்டம் சவுதி அரேபியா குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ரொனால்டோ வெளிநாட்டு வீரர் என்பதால் அவருக்கு இந்த சட்டம் பொருந்தாது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஏதேனும் குற்றச்செயல் வந்தால் மட்டுமே சவுதி அரேபியாவின் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இப்போதைக்கு அவர் தனது காதலி மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கியிருப்பதற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ரொனோல்டாவை எதிர்த்து சவுதி அரேபியாவில் உள்ள எவரும் வழக்கு தொடரப் போவதில்லை என்றும் அந்த அளவுக்கு அவரை அனைவரும் விரும்புகிறார்கள் என்றும் அவர் தங்கள் நாட்டிற்காக விளையாட வந்துள்ளார் என்ற பெருமை ஒவ்வொரு சவுதி அரேபிய குடிமகனுக்கும் உள்ளது என்றும் கூறியுள்ளார். எங்கள் நாட்டிற்காக ஏராளமான வெற்றியை இந்த இரண்டரை ஆண்டுகளில் அவர் பெற்றுத் தருவார் என்பதால் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எங்களுக்கு கவலை இல்லை என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.