Connect with us

தமிழ்நாடு

பள்ளிக்கு சென்ற முதல் நாளே பரிதாபமாக உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி!

Published

on

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற பகுதியில் நிர்மல் மாதா என்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த சௌமியா திடீரென வகுப்பறையில் மயக்கமடைந்தார்.

இதனையடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனர். அதன் பின்னர் அவர்கள் பெற்றோருக்கும் தகவல் அளித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை செய்து வருவதாக தெரிவித்த நிலையில் திடீரென செளம்யா உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்து வருகின்றனர்.

உண்மையில் சௌமியா மயக்கமடைந்து இருந்த நிலையில் எதற்காக மயக்கம் அடைந்தார் என்பதை கண்டுபிடிக்க ஸ்கேன் கூட எடுக்காமல் சாதாரண மருத்துவம் செய்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் சிகிச்சை செய்தது ஏன் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?