தமிழ்நாடு
பள்ளிக்கு சென்ற முதல் நாளே பரிதாபமாக உயிரிழந்த 8ஆம் வகுப்பு மாணவி!
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிக்கு சென்ற முதல் நாளே எட்டாம் வகுப்பு மாணவி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற பகுதியில் நிர்மல் மாதா என்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்த சௌமியா திடீரென வகுப்பறையில் மயக்கமடைந்தார்.
இதனையடுத்து அந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனர். அதன் பின்னர் அவர்கள் பெற்றோருக்கும் தகவல் அளித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை செய்து வருவதாக தெரிவித்த நிலையில் திடீரென செளம்யா உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று உறவினர்கள் புகார் அளித்து வருகின்றனர்.
உண்மையில் சௌமியா மயக்கமடைந்து இருந்த நிலையில் எதற்காக மயக்கம் அடைந்தார் என்பதை கண்டுபிடிக்க ஸ்கேன் கூட எடுக்காமல் சாதாரண மருத்துவம் செய்து இருப்பதாகவும் தீவிர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மணி நேரம் சிகிச்சை செய்தது ஏன் என்றும் உறவினர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.