ஆரோக்கியம்
“மண்சட்டியில் மட்டன் பிரியாணி… புதுச்சேரியில் மணக்க மனக்க மக்கள் வரிசை!”

மண் மணக்கும் மண்சட்டி பிரியாணி – புதுச்சேரியில் பாரம்பரிய ருசியை தேடி வரிசையில் நின்று சாப்பிடும் மக்கள்!
பிரியாணி என்றாலே உணவின் மன்னர் என்றே சொல்லலாம். அதன் வாசனை, சுவை மற்றும் ஸ்பெஷலான தயாரிப்பு முறையால் அது மக்கள் மனதில் எப்போதும் இடம் பிடித்திருக்கிறது. அந்த வகையில், புதுச்சேரி பாக்கமுடையான் பட்டு பகுதியில் உள்ள சாலையோர கடை ஒன்றில் மண்சட்டியில் பரிமாறப்படும் மட்டன் பிரியாணி மக்களின் பேரருவை பெற்றிருக்கிறது.
இந்த கடையில், மந்தார இலை மீது மண்சட்டியில் பரிமாறப்படும் பரம்பரிய மட்டன் பிரியாணி, சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் ஒரு அற்புதமான உணவுப் பயணமாக மாறியுள்ளது. பலர், வேலைக்கே விடுமுறை எடுத்துக் கொண்டு வரிசையில் நின்று இந்த பிரியாணியை வாங்கிச் செல்கிறார்கள்.
அதிக வாசனை, இயற்கையான மணம், பாரம்பரிய சுவை – இவை அனைத்தையும் ஒரு சேர வழங்கும் இந்த பிரியாணி, மண் மணம் மாறாத பாரம்பரிய உணவாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரிக்கு வரும் போது, இந்த பிரியாணியை தவறாமல் ருசித்து பாருங்கள்!














