இந்தியா
கேரளாவில் 50% இருக்கைகளுடன் திரை அரங்குகள் திறக்க அனுமதி!
கேரளாவில் ஜனவரி 5-ம் தேதி முதல் திரை அரங்குகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு ஜனவரி மாதம் முதல் கேரளாவில் கொரோனா தொற்று பரவல் தொடங்கியது. எனவே மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட திரை அரங்குகள், ஜனவரி 5-ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கப்படுவதாகக் கேரளா முதல்வர் பினராயி விஜயன் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பொங்கல் உள்ளிட்ட விழாக் காலங்கள் வர உள்ளதால் திரை அரங்குகளுக்கு இந்த தளர்வு வழங்கு வழங்கப்பட்டுள்ளது என்று பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்த மாதம் முதல் கோவிட்-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வரும். முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்களுக்குத் தடுப்பு மருந்து வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.