Connect with us

சினிமா செய்திகள்

30 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் ‘சின்னக்கவுண்டர் 2’: ஹீரோ யார் தெரியுமா?

Published

on

விஜயகாந்த் நடித்த சின்ன கவுண்டர் திரைப்படம் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் வசூல் அளவிலும் விமர்சன அளவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க இந்த படத்தின் இயக்குநர் ஆர் வி உதயகுமார் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜயகாந்த் சுகன்யா நடிப்பில், இளையராஜா இசையில், ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் உருவான சின்னக்கவுண்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இயக்க உதயகுமார் திட்டமிட்டிருந்தார்.

விஜய் சேதுபதியை சின்னக்கவுண்டர் வேடத்தில் நடிக்க அவர் திட்டமிட்டிருந்த நிலையில் விஜய் சேதுபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இந்த முயற்சியை எடுத்துள்ளார்.

ஆர்பி உதயகுமார் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். மேலும் ஆர்கே சுரேஷ் இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என்றும் சின்னக்கவுண்டர் படத்தின் உண்மையான இரண்டாம் பாகமாக இந்த படம் இருக்கும் என்றும் முதல் பாகம் வெளியானபோது பெற்ற வரவேற்பை போல் இந்த படத்திற்கும் வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?