Connect with us

இந்தியா

இந்தியப் பெருங்கடல் பகுதியை குறிவைக்கும் சீனா.. கடலுக்குள் இறக்கிய நவீன டிரோன்கள்.. வெளியான ரகசியம்!

china uses Underwater Drones in indian ocean for for naval intelligence purposes

Published

on

நியூ ஜெர்ஸி : சீனா ஸீ விங் கிளைடர் எனப்படும் நீருக்கடியில் பயன்படுத்தும் டிரோன்களை இந்திய பெருங்கடல் பகுதியில் களமிறக்கி கடற்படைகளுக்கு தேவையான உளவு தகவல்களுக்காக பயன்படுத்தி வந்ததாக பாதுகாப்பு ஆய்வாளர் எச்.ஐ. சுட்டன் தெரிவித்துள்ளார். இவ்வகை டிரோன்களை பல மாதங்கள் நீருக்கடியில் நிறுத்தி தகவல்களை சேகரிக்க முடியும்.

சீனா வளர்ந்து வரும் பல உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது. சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த 100 ஆண்டுகளை நிறைவடைவதற்குள் அணைத்து வழிகளிலும் அமெரிக்காவிற்கு நிகராக மாற்றும் எல்லா வேலைகளிலும் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ராணுவத்தில் நவீனங்களை உட்புகுத்தும் நடவடிக்கைகளிலும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தான் அமெரிக்காவிற்கு நிகராக உளவு சேகரிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட தொடங்கியுள்ளது. அதற்காக ஸீ விங் கிளைடர் எனப்படும் நீருக்கடியில் பயன்படுத்தக்கூடிய ஒருவகை வாகனங்களை இந்திய பெருங்கடல் பகுதியில் 2019 ஆம் ஆண்டு டிசம்பரின் மத்தியில் களமிறக்கி இந்தாண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் 3,400 க்கு மேற்பட்ட தகவல் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது.

இதுகுறித்து போர்ப்ஸ் பத்திரிகைக்கு எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் எச்.ஐ. சுட்டன் அரசாங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி இவ்வகை டிரோன்கள் அமெரிக்க கடற்படையால் பயன்படுத்தப்பட்டவை போலவே இருக்கின்றன, அதில் ஒன்று கடந்த 2016 ஆம் ஆண்டு அப்பகுதியில் கடந்து செல்லும் கப்பல்களின் பாதுகாப்பை காரணம் கூறி சீனாவால் கைப்பற்றபட்டது என்றார். சீனா இப்போது இந்த வகையான நீருக்கடியில் பயன்படுத்தும் டிரோன்களை இந்தியப் பெருங்கடலில் பெருமளவில் பயன்படுத்துகிறது என்பது ஆச்சரியமாக இருக்கலாம்.

பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு டிசம்பரில் இருந்து சேகரித்த அறிக்கையில் சுமார் 14 டிரோன்கள் களமிறக்கப்பட்டு அதில் 12 மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை கிளைடர்கள் வேகமானவையோ அல்லது சுறுசுறுப்பானவையோ கிடையாது, இருப்பினும் அவை தொலைதூர மிஷன்களுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் சுட்டன் கூறினார். இந்தியப் பெருங்கடலில் வைக்கப்பட்டுள்ள இந்த சீன கிளைடர்கள் கடல்சார் தரவுகளை சேகரிப்பதாகக் கூறப்படுகிறது, அவை ஆபத்தானவை கிடையாது என்றாலும் கடல் பகுதிகளில் உளவு நோக்கங்களுக்காக பயன்படுத்த படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சவால்களைக் குறிப்பிட்டு, பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் இந்த மாத தொடக்கத்தில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய தளங்களுக்கான ஒரு போட்டியை உலகம் கண்டுகொண்டு இருப்பதாக கூறினார். மேலும் வரவிருக்கும் காலங்களில் அதன் வேகத்தை அதிகரிக்க போகிறது என்றும் கூறினார். உலகளாவிய பாதுகாப்பு உச்சிமாநாட்டில் உரையாற்றிய அவர் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் புவிசார் மூலோபாய போட்டிக்கு பிறகு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மூலோபாய இடங்கள் மற்றும் தளங்களுக்கான ஒரு போட்டியையும் நாங்கள் காண்கிறோம், வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்றார். இராணுவத் துறையில், தொழில்நுட்பம் அழிவின் ஆதாரமாக இருக்கக்கூடாது, மாறாக ஒரு தடுப்பு கருவியாக செயல்பட வேண்டும்.

எனவே பாதுகாப்பிற்கான எங்கள் அணுகுமுறை ஒருதலைப்பட்சத்திலிருந்து பலதரப்பு முறைக்கு மாற வேண்டும், இது எதிர்காலத்தை பலப்படுத்துவதற்காக நட்பு நாடுகளுடன் பயிற்சி நடவடிக்கைகளை அதிகப்படுத்துவதையும் கட்டாயப்படுத்துகிறது. இந்தியா எதிர்கொள்ளும் சவால்களின் அடிப்படையில், நம்முடைய பாதுகாப்பு படைகளின் திறன் மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான கட்டமைக்கப்பட்ட நீண்டகால திட்டமிடல் நமக்கு தேவை என்றும் பிபின் ராவத் கூறினார்.

கடந்த மே மாதத்தில் இருந்து இந்தியா சீனா எல்லை பகுதியில் மோதல் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட பதட்டத்தை தவிர்க்க பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்த பலனும் இல்லை. சில முறை முடிவுகள் எடுக்கப்பட்டாலும் மீண்டும் சீனா தன்னுடைய படைகளை பின்வாங்க மறுப்பு தெரிவித்து வருகிறது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில் இந்திய பெருங்கடல் பகுதிக்குள்ளும் சீனா உளவு வேளையில் ஈடுபட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தென்சீன கடல் பிரச்சனையில் பெரும்பாலான பகுதிகள் தனக்கு சொந்தம் என பல நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் சீனா அடுத்து இந்திய பெருங்கடல் பகுதியையும் குறிவைக்க தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

தினபலன்4 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 22/04/2026 (புதன்கிழமை)

தொழில்நுட்பம்14 மணி நேரங்கள் ago

ஆப்பிளின் அடுத்த CEO யார்? டிம் குக்கிற்கு பதிலாக ஜான் டெர்னஸ் வருகிறாரா? யார் இவர்?

இந்தியா14 மணி நேரங்கள் ago

TCS பாலியல் தொல்லை சர்ச்சை: ‘ஹனிமூன்? உறவு இருந்ததா? கருக்கலைப்பு?’—பெண் ஊழியர்களிடம் அதிர்ச்சி கேள்விகள்!

ஆட்டோமொபைல்14 மணி நேரங்கள் ago

பெட்ரோல் செலவு குறையுமா? 15% பெட்ரோல் கார்கள் இந்தியாவில் விரைவில்!

உலகம்15 மணி நேரங்கள் ago

ஓமன் கடலில் பதற்றம்: இரானிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது – பதிலடி எச்சரிக்கை!

சினிமா2 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

வணிகம்2 நாட்கள் ago

டிஜிட்டல் தங்கம் vs நகைக் கடை தங்கம்: எது பாதுகாப்பான முதலீடு? முழு விவரம்!

வணிகம்2 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

வணிகம்2 நாட்கள் ago

SGB 2020-21 முதலீட்டாளர்களுக்கு நல்ல செய்தி: இன்று முதல் முன்கூட்டியே பணம் பெறலாம் – முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

சுக்கிரன் ரிஷபத்தில் பிரவேசம் 2026: மாளவ்ய யோகம் உருவாகிறது – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா7 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

வணிகம்5 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: ரூ.69,000 குறைந்தபட்ச சம்பளம், OPS மீண்டும் – மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அப்டேட்!

Translate »
Spezielle techniken : kunstblut entfernen kleidung leicht gemacht. Seyhan forklift, iş süreçlerinizi hızlandırmak ve iş gücünüzü artırmak için güvenilir forklift kiralama hizmetleri sunar. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.