Connect with us

தமிழ்நாடு

சர்ச்சைப் பேச்சு முன்னாள் ராணுவ வீரர் மீது பாய்ந்தது வழக்கு!

Published

on

கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன் மிரட்டும் தொணியில் பேசினார். இதனையடுத்து அவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

#image_title

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று சென்னை திருவல்லிக்கேணியில், கிருஷ்ணகிரியில் ராணுவ அதிகாரி கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும், பாஜக பட்டியலின அணி நிர்வாகி தடா பெரியசாமி கார் மீது தாக்குதல் நடத்தியதற்கும் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் ராணுவ அதிகாரி கர்னல் பாண்டியன், எங்களுக்கு குண்டு வைக்கவும் தெரியும், துப்பாக்கியால் சுடவும்தெரியும், அதை செய்ய வைக்காதீர்கள் என தமிழக அரசை மிரட்டும் தொணியில் பேசினார். இவரது இந்த சர்ச்சை பேச்சும் அதனை தொடர்ந்த செய்தியாளர் சந்திப்பும் வைரலாக பரவியது. மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பதால் தமிழக அரசை எச்சரிக்கிறேன். எங்களை அந்த நிலைக்குத் தள்ளிவிட வேண்டாம். இனிமேலும் இது நடந்தால் நாங்கள் செய்வோம் என கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்.

இவரது இந்த பேச்சுக்கு சமூகவலைதளங்களில் கடும் எதிர்ப்பு நிலவியது. இவர் மீது வழக்கு பதிவு செய்ய பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?