சினிமா செய்திகள்
ஒரு சூரியன், ஒரு சந்திரன் தான்: இளையராஜா கருத்து குறித்து விஜயகாந்த்!
இசைஞானி இளையராஜா சமீபத்தில் பிரதமர் மோடி மற்றும் சட்ட மேதை அம்பேத்கார் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உள்ளாகியுள்ள நிலையில் இதுகுறித்து நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: இளையராஜா அவர்கள் பிரதமர் மோடியை அம்பேத்கருடன் புத்தகம் ஒன்றில் தனது கருத்தை தெரிவித்திருந்தார். இளையராஜாவின் கருத்து தனிப்பட்ட கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் என்ற நோக்கத்தோடு ஏற்றுக்கொண்டு மேலும் அவரை விமர்சனம் செய்து காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என்று கூறியுள்ளார்.
மேலும் அண்ணல் அம்பேத்கர், பிரதமர் மோடி, இசைஞானி இளையராஜா ஆகியோர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இன்றைக்கும் அவரவர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக உள்ளனர்.
ஒரு சூரியன், ஒரு சந்திரன் அதே போல தான் இங்கு யாரையும் யாருடனும் ஒப்பிட முடியாது, அவர்களுக்கு நிகர் அவர் தான்; என்று கூறியுள்ளார். விஜயகாந்தின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.