Connect with us

இந்தியா

ஆப்கன் விவகாரத்தால் ஐதராபாத் பிரியாணி விலை உயர்வு!

Published

on

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தாலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இந்த விவகாரம் காரணமாக இந்தியாவில் பிரியாணி விலை ஏறி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மற்றும் அரசுக்கு இடையே நடைபெற்று வந்த போரில் தாலிபான்கள் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியுள்ளனர். காபூல் உள்பட அனைத்து ஆப்கன் நகரங்களும் தற்போது தாலிபான்கள் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அங்கிருந்து ஏற்றுமதியாகும் பல பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்தியாவில் உள்ள பிரியாணி கடைகளில் பயன்படுத்தப்படும் உலர் பழங்கள் பெரும்பாலும் ஆப்கானிஸ்தானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தாலிபான்கள் தற்போது பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட உலர் பழங்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக ஹைதராபாத் பிரியாணி உள்பட அனைத்து வகை பிரியாணிகளுக்கும் உலர் பழங்கள் கிடைப்பதில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இருந்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் வழியாக உலர்பழங்கள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது அது நிறுத்தப்பட்டுள்ளதால் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய தீவிர ஆலோசனை செய்து வருவதாக இந்திய ஏற்றுமதி அமைப்பின் கூட்டமைப்பு இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லி சேர்ந்த உலர்பழங்கள் வணிகர் ஒருவர் கூறியபோது ஆப்கானிஸ்தானிலிருந்து கிடைத்து வந்த வால்நட் மற்றும் பாதாம் ஆகியவை தற்போது வரத்து இல்லை என்பதால் அதன் விலை கடந்த சில நாட்களில் பல மடங்கு அதிகரித்திருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் பிரச்சனை காரணமாக ஹைதராபாத் பிரியாணி விலை உயர்ந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?