சினிமா செய்திகள்
நாளை மறுநாள் 500 திரையரங்குகளில் இருந்து ‘பீஸ்ட்’ படத்தை தூக்க திட்டமா?
நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை 500 திரையரங்குகளில் தூக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் இன்று சுமார் 800 முதல் 850 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவு மிக மோசமான விமர்சனங்கள் வந்துள்ளதை அடுத்து இந்த படத்தின் வசூல் பெருமளவு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் நாளை கேஜிஎஃப் 2 படம் ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படம் சூப்பராக இருந்தால் நாளை மறுநாள் முதல் ‘பீஸ்ட்’ திரையிடப்பட்ட 500 திரையரங்குகளில் கேஜிஎஃப் 2 திரையிட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .
ஆனால் அதே நேரத்தில் கேஜிஎஃப் 2 படமும் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றால் இதே நிலைதான் நீடிக்கும் என்று தெரிகிறது. மொத்தத்தில் நாளை வெளியாகவிருக்கும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தின் ரிசல்ட்டை பீஸ்ட் படக்குழுவினர் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.