சினிமா செய்திகள்
கோடீஸ்வரர் வீட்டு பெண்ணையா வேண்டாம் என சொன்னார் பாலா? அதிர்ச்சி தகவல்
இயக்குனர் பாலாவின் மனைவி கோடீஸ்வரர் வீட்டு மகள் என்றும் ஒரு கோடீஸ்வரியை பாலா வேண்டாம் என்று விவாக ரத்து செய்துவிட்டது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாகவும் கோலிவுட் திரை உலகினர் கூறிவருகின்றனர்.
பிரபல இயக்குனர் பாலா கடந்த 2004ஆம் ஆண்டு தனது உறவுக்காரப் பெண்ணான முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். முத்து மலரின் தந்தை மதுரையில் ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் முத்துமலர் சிறு குழந்தையில் இருந்தே சொகுசான வாழ்க்கை வாழ்ந்து உள்ளதாகவும் வீட்டிற்கும் செல்ல பிள்ளையாக வளர்ந்து உள்ளதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர் பாலா முத்துமலரிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதுமட்டுமின்றி மனைவி குழந்தைகளிடம் மனம் விட்டு கூட பேசாமல் எப்போதும் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவராக பலா இருந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
எனவே இது குறித்து அவ்வப்போது கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய முடிவெடுத்து விட்டதாகவும் சினிமா வட்டாரம் தகவல் வெளியாகி உள்ளது. பாலாவின் மனைவி ஒரு கோடீஸ்வரரின் மகள் என்ற தகவல் கோலிவுட் திரையுலகினருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.