இந்தியா
அவ்னி லேகரா பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்று, இந்தியாவிற்கு வெண்கலமும் கிடைத்தது!

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவின் அவ்னி லேகரா தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவ்னி தனது திறமையை வெளிப்படுத்தி 249.7 புள்ளிகளைப் பெற்று முதலிடம் பிடித்தார்.
கோரியாவின் யுன்ரி லீ இவரது முதன்மையான போட்டியாளர், ஆரம்பத்தில் 0.8 புள்ளிகள் குறைவாக இருந்தாலும், இறுதி சுற்றில் 10.5 புள்ளிகளை பெற்றதால், அவ்னி லீயை 2.9 புள்ளிகளால் முந்தினார். லீ இறுதியாக 246.8 புள்ளிகளை மட்டுமே பெற்றார்.
இந்த போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த அவ்னி, சிறுவயதில் நடந்த விபத்தால் சக்கர நாற்காலியை நம்பி வாழ்ந்து வருகிறார். ஆனாலும், துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் அவர் காட்டிய ஆர்வமும் அசாத்திய முயற்சியும், அவருக்கு பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வெல்ல உதவியுள்ளன.
அவ்னி இதற்கு முன்னதாக டோக்கியோ பாராலிம்பிக் போட்டியிலும் தங்கம் வென்று, பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார்.























