தமிழ்நாடு
ஓபிஎஸ்-க்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய திட்டம்: அதிர்ச்சியில் அதிமுக
முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரப்பப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக கூறப்பட்டதை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருக்கும்போது ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் விசாரணையை தீவிரமாக செய்துவந்த நிலையில் திடீரென அப்பல்லோ மருத்துவமனையை சுப்ரீம் கோர்ட்டு சென்றதை அடுத்து இந்த விசாரணை சில காலம் தடைப்பட்டது. தற்போது ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததை அடுத்து அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட பலரிடம் ஆறுமுகசாமி ஆணைய அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடமும் விசாரணை செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டிருப்பதாகவும் மார்ச் 15ஆம் தேதிக்கு பின்னர் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.