Connect with us

தமிழ்நாடு

அதிமுக கொடியை இனி ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது: பொள்ளாச்சி ஜெயராமன்!

Published

on

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுக கொடியை கூட தனது காரில் கட்ட கூடாது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.

#image_title

அதிமுக பொதுக்குழு முடிவுகளையும், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்த இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக பொதுச்செயலாளர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அங்கீகாரத்தை அடுத்து இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிச்சாமி வசமானது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் ஆணையத்தின் ஆணையின் படி அதிமுகவின் பெயரை, கட்சியை, இரட்டை இலை சின்னத்தை யாரும் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ முடியாது. இனிமேல் அதிமுக என்றால் எடப்பாடியார் தான். இதுவரை இருந்து வந்த அனைத்த போராட்டமும் முடிந்து விட்டது.

ஓபிஎஸ் தரப்பில் அதிமுகவின் கொடியை இனிமேல் பயன்படுத்தினால் நாங்கள் கிரிமினல் வழக்கு தொடர்வோம். சட்டமன்றத்தில் அதிமுகவின் பெயரை சொல்லி ஓபிஎஸ் அமர முடியாது. நாளை முதல் ஓபிஎஸ் அவரது காரில் அதிமுக கொடியைக் கட்டிக் கொண்டு வருவாரா என்று பாருங்கள். அப்படி கொடியை கட்டிக் கொண்டு வந்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என்று பேசினார்.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?