Connect with us

கிரிக்கெட்

கிரிக்கெட் அணிக்கு கேப்டன் ஆகிறார் ராகுல் டிராவிட் மகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு

Published

on

இந்தியாவின் தடுப்புச் சுவர் என்று போற்றப்பட்ட ராகுல் ராவிட் கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு சாதனைகள் செய்துள்ள நிலையில் தற்போது அவரது மகன் கர்நாடக ஜூனியர் அணிக்கு கேப்டன் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன்கள் இருவருமே கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள்.

ராகுல் டிராவிட் மகன்கள் சமித் மற்றும் அன்வே ஆகிய இருவரும் கர்நாடக மாநிலத்தில் மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடி வரும் நிலையில் தற்போது அவரது இளைய மகன் அன்வே, 14 வயதிற்கு உட்பட்ட கர்நாடக அணியின் கேப்டன் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டும் இன்றி ராகுல் டிராவிட் போலவே அன்வே, விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் வரும் 23ஆம் தேதி முதல் தென்மண்டல ஜூனியர் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு கர்நாடகா அணியின் கேப்டனாக அன்வே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக மாநில கிரிக்கெட் போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ராகுல் டிராவிட்டின் மூத்த மகன் சமத் இதே 14 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணியில் அன்வே கடந்த சில மாதங்கலாக மிகவும் சிறப்பாக விளையாடினார் என்றும், குறிப்பாஇக அவர் விக்கெட் கீப்பிங் செய்வதில் திறமையானவர் என்றும் பாராட்டுக்கள் குவிந்து வந்த நிலையில் தற்போது அவர் கேப்டன் ஆகி, கர்நாடக மாநில ஜூனியர் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர் இந்திய அணியிலும் இணைய அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?