தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் திடீரென ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாலும் உலக சுகாதார அமைப்பு பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியதாலும் கர்நாடகா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பது உள்பட பல்வேறு முடிவுகளை எடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியபோது தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.