Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 1-12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ்

Published

on

தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க திட்டமிட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் திடீரென ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதாலும் உலக சுகாதார அமைப்பு பள்ளிகளை திறக்க அறிவுறுத்தியதாலும் கர்நாடகா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறப்பது உள்பட பல்வேறு முடிவுகளை எடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் சற்றுமுன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறியபோது தமிழகத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்பை முதல்வர் இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?