டிவி
விஜய் டிவியில் இருந்து வெளியேறிய ஆல்யா மானசா.. அடுத்த சீரில் என்ன? எந்த டிவிக்கு?
தொலைக்காட்சி தொடர்களில் நம்பர் 1 நடிகையாக வளம் வருபவர் ஆல்யா மானசா. இவர் நடித்த முதல் சீரியலான ராஜா ராணி மூலம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களைப் பெற்றார்.
அந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவருக்கு முதல் பெண் குழந்தை பிறந்தது.
தொடர்ந்து ராஜா ராணி 2-ம் பாகம் சீரியலில் நடித்து வந்த போது, இரண்டாம் முறையாகக் கர்ப்பமான இவர், அந்த சீரியலில் இருந்து இடையில் வெளியேறினார்.
இந்நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு, இப்போது இவர் அடுத்து எந்த சீரியலில் நடிக்க உள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது.
சரிகம நிறுவனம் சன் தொலைக்காட்சிக்காக எடுக்கும் புதிய சீரியல் ஒன்றில் ஆல்யா மானசா தற்போது நடித்து வருகிறார்.
விரைவில் சீரியலின் பெயர் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆல்யாவின் கணவர் சஞ்சீவ் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஆல்யா மானசா நடிக்கும் சீரியலில் யார் கதாநாயகன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஆனால் விஜய் டிவி சீரியலில் ஆல்யா இல்லை என்பது மட்டும் உறுதி.