சினிமா செய்திகள்
தனுஷை பிரிந்தாலும் செல்வராகவனை அத்தான் என அழைக்கும் ஐஸ்வர்யா: வைரல் போஸ்ட்!
18 ஆண்டுகளாக தம்பதிகளாக இருந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிந்தாலும் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா தரப்பில் இருந்து எடுத்த முயற்சிகள் அடுத்தடுத்து தோல்வி அடைந்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது .
இந்த நிலையில் தனுசை பிரிந்த போதிலும் தனுஷ் குடும்பத்தினர் மீது குறிப்பாக செல்வராகவன் மீது ஒரு மரியாதை கலந்த பாசத்தை ஐஸ்வர்யா வைத்து உள்ளார் என்று அவரது வட்டாரங்கள் கூறுகின்றன.
குறிப்பாக செல்வராகவன் சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய போது அவரை கட்டிப்பிடித்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராஇல் பதிவு செய்து அவருக்கு தனது வாழ்த்தையும் தெரிவித்து இருந்தார் .
இந்த நிலையில் தற்போது செல்வராகவன் நடித்த சாணிக்காகிதம் என்ற திரைப்படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகியுள்ள நிலையில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், வாவ் செல்வா அத்தான் என்று உரிமையுடன் உறவுமுறையை குறிப்பிட்டு கூறியுள்ளார் .
இதை அடுத்து தனுஷை பிரிந்தாலும் செல்வராகவன் மீது அவரது மரியாதை கலந்த பாசம் தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது.