Connect with us

இந்தியா

கோவா கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் AI-இயங்கும் ரோபோக்கள்.. ஏன் தெரியுமா?

Published

on

மனிதர்களின் வேலைகளை எளிதாக்க பயன்படுத்தப்பட்ட ரோபோக்கள் தற்போது மனிதர்களின் உயிரை காப்பாற்றவும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் கோவா கடற்கரையில் பெரிய அலைகளால் இழுத்துச் செல்லப்படும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றவும் அவர்களை எச்சரிக்கை செய்யவும் தற்போது ரோபோட்க்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோவா கடற்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ரோபோக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த ரோபோட்க்கள் மனிதர்களுக்கு கடல் அலையால் ஏற்படும் ஆபத்தை எச்சரிப்பதோடு அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கோவா என்றாலெ கடற்கரையில் குளிப்பது தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். ஆனால் கடலில் குளிப்பது என்பது மிகவும் ஆபத்தான செயல் என்று எச்சரிக்கை விடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கடல் அலையால் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர்களில் பலரை மீட்பு படையினர் மீட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் கடல் அலைகளால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கோவா அரசு தற்போது சுற்றுலா பயணிகளை எச்சரிக்கை செய்யவும் ஆபத்தில் கடல் நீரில் மூழ்கும் சுற்றுலா பயணிகளை காப்பாற்றும் வகையிலும் ரோபோட்களை அமைத்துள்ளதாக கூறியுள்ளது.

AI அடிப்படையில் இயங்கும் Aurus மற்றும் Triton ஆகிய ரோபோட்டுகள் மிகவும் துல்லியமாக ரோந்து செல்வதாகவும் அதிக அலைகள் இருக்கும் பகுதியை கண்டுபிடித்து அங்கு சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கை செய்வதன் மூலம் அவர்களின் உயிர் காக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. ரோபோக்கள் மூலம் இந்த கண்காணிப்பு பணியை செய்வது மிகவும் எளிதாக இருக்கிறது என்றும் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து குறித்து எச்சரிக்கை மட்டுமின்றி விபத்து ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவலர்களுக்கு தகவல் அனுப்பும் பணியையும் ரோபோட்கள் செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கோவாவில் உள்ள மிராமர் கடற்கரையில், தெற்கு கோவாவில் உள்ள பைனா, வெல்சாவோ, பெனாலிம், கல்கிபாக் மற்றும் வடக்கு கோவாவில் உள்ள மோர்ஜிம் ஆகிய இடங்களில் இந்த ரோபோட்கலை காணலாம் என்று ஏஜென்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த ஆண்டுக்குள் சுமார் 100 ரோபோட்டுகள் கோவா கடற்கரை முழுவதும் பயன்படுத்தப்படும் என்றும் கோவா கடற்கரையில் இனி ஒரு உயிர் கூட பலியாகாத வகையில் இந்த ரோபோட்டுகள் மனித உயிர்களை காக்கும் என்றும் கூறப்படுகிறது.

author avatar
seithichurul
பர்சனல் ஃபினான்ஸ்22 மணி நேரங்கள் ago

சம்பள உயர்வுக்கான 9 வலுவான காரணங்கள்

பர்சனல் ஃபினான்ஸ்22 மணி நேரங்கள் ago

வங்கி கணக்கில் பணம் இல்லாமல் UPI மூலம் பணம் செலுத்துவது எப்படி?

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்23 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன்கள் (20/09/2024)

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 நாள் ago

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு வார பலன்கள் (செப். 19 – 25)

வணிகம்2 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (19/09/2024)!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்2 நாட்கள் ago

இன்றைய (19 செப்டம்பர் 2024) ராசிபலன்கள்

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

ஜோதிடம்2 நாட்கள் ago

இந்த 4 ராசிக்காரர்கள் எளிதாக காதலிக்கிறார்கள்! உங்க ராசி என்ன?

வேலைவாய்ப்பு2 நாட்கள் ago

HAL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

செய்திகள்2 நாட்கள் ago

கருவேப்பிலை பானம்: எடை குறைப்பு, ரத்த சர்க்கரையுடன் பல சுகாதார நன்மைகள்!

வணிகம்5 நாட்கள் ago

யூபிஐ பரிவர்த்தனை வரம்பு உயர்வு: உங்களுக்கு என்ன பயன்?

வணிகம்3 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (17/09/2024)!

கட்டுரைகள்6 நாட்கள் ago

பொறியாளர்களின் பங்களிப்பை கொண்டாடுவோம்: பொறியாளர் தினம்!

வணிகம்3 நாட்கள் ago

ஜியோவின் ஒரு ஆண்டு அன்லிமிட்டட் ரீசார்ஜ் திட்டம் இலவசம்! பெறுவது எப்படி?

ஜோதிடம்6 நாட்கள் ago

புரட்டாசியில் குழந்தை பிறந்தால் பிரச்சனையா? உண்மையை தெரியுமா?

ஜோதிடம்6 நாட்கள் ago

ராகுவின் நட்சத்திர மாற்றம்: 3 ராசிகளுக்கு வாழ்வில் பெரும் முன்னேற்றம்!

ஜோதிடம்6 நாட்கள் ago

சூரியனின் இடப்பெயர்ச்சி: சிக்கல்களை சந்திக்க போகும் ராசிகள் யார்?

பர்சனல் ஃபினான்ஸ்3 நாட்கள் ago

கணவர் மனைவியின் கணக்கிற்கு பணத்தை மாற்றினால், வரி யார் செலுத்த வேண்டும்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய (2024, செப்டம்பர் 15) ராசிபலன்!

தினபலன்3 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (18 செப்டம்பர் 2024)