Connect with us

சினிமா செய்திகள்

பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசு: பிரபல நடிகர் அசத்தல்

Published

on

மார்ச் 8ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகினரும் பலர் தங்கள் சமூக வலைதளங்களில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பெண்கள் தினத்தை கொண்டாட பெண் பத்திரிகையாளர்களுக்கு பட்டுப்புடவை பரிசளித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் ஜெய் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடித்த ‘வீரபாண்டியபுரம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் தற்போது அவர், ‘எண்ணித்துணிக, குற்றமே குற்றம்’ உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் செய்தியாளர்களுக்கு அழகிய பட்டுப்புடவைகளை பரிசாக வழங்கி நடிகர் ஜெய் ஆச்சரியம் அளித்துள்ளார். மேலும் அந்த பட்டுப்புடவைகளை தனது தந்தை சகோதரி ஆகியோர்களை அனுப்பி ஒவ்வொரு செய்தியாளர்களுக்கும் அவர் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நடிகர் ஜெய் கூறியபோது, ‘ பெண் பத்திரிகையாளர்களை நம் குடும்பத்தில் சகோதரிகளில் ஒருவராக நான் பார்க்கிறேன். நேரம் காலம் பார்க்காமல் குடும்பத்தையும் வேலையையும் அவர்கள் சமாளிக்கின்றனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய ஆசைப்பட்டதால் தான் இந்த பட்டுப்புடவைகளை பரிசாக அளித்து உள்ளேன் என்று கூறியுள்ளார்.

 

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?