சினிமா செய்திகள்
‘சந்திரமுகி 2’ அறிவிப்பு நாளையா? லைகாவின் பரபரப்பு டுவிட்!
தமிழ் சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலித்த நிலையில் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் இரண்டு பாகங்களாக ரூபாய் 800 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமான ’சந்திரமுகி 2’ திரைப்படம் விரைவில் உருவாக இருப்பதாகவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் லைக நிறுவனம் நாளை முக்கிய அறிவிப்பு என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளது. மேலும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ள நிலையில்இந்த புகைப்படத்தை பார்க்கும் போது அது ’சந்திரமுகி 2’ படத்தின் அறிவிப்பாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Get ready for an exciting announcement ????️ tomorrow at 6️⃣PM. pic.twitter.com/XlYiu9PpHh
— Lyca Productions (@LycaProductions) June 13, 2022