இந்தியா
அதானி எண்டர்பிரைசஸ் FPO ரத்து.. ரூ.20,000 கோடி பணத்தை திரும்ப செலுத்த முடிவு..!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் அதான்யின் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் சமீபத்தில் FPO அறிமுகம் செய்த நிலையில் ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. இந்த நிலையில் அதான் நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவதை அடுத்து FPO ரத்து செய்யப்படுவதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை பணத்தை திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹிட்டன்பெர்க் என்ற நிறுவனம் கூறிய குற்றச்சாட்டு காரணமாக அதானி நிறுவனங்களின் பங்குகள் மிகவும் மோசமாக சரிந்து வருகிறது. அதானி நிறுவனங்களின் முக்கிய பங்குகள் சுமார் 20 முதல் 25 சதவீதம் சரிந்து வந்ததால் உலக பணக்காரர் பட்டியலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை மூன்றாவது இடத்தில் இருந்த அதானி, தற்போது பதினைந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

Adani Enterprises FPO
இந்த நிலையில் அதானி நிறுவனங்களில் ஒன்றான அதான் என்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ.20,000 கோடி நிதி திரட்டுவதற்காக FPO பங்குகளை அறிமுகம் செய்தது. அதானி நிறுவனங்களின் பங்குகள் குறைந்த போதிலும் இந்த FPO வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் முன் வந்தனர் என்பதும் முழுமையாக விற்று தீர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் அதானி நிறுவனங்களின்பங்குகள் தொடர்ச்சியாக இறங்கி வருவதை அடுத்து FPO ரத்து செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளதாகவும் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப வழங்க அதானி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எங்கள் நிறுவனங்களின் பங்குகள் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து கொண்டு வருகிறது. இந்த அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு மேலும் முதலீட்டாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவது தார்மீக ரீதியாக சரியாக இருக்காது என்று நாங்கள் கருதுகிறோம்.
எனவே முதலீட்டாளர்களை நிதி இழப்பில் இருந்து பாதுகாக்க FPO ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். எங்கள் நிர்வாகத்தினர் முதலீட்டாளர்களால் பெறப்பட்ட பணத்தை திரும்பி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இன்னும் ஓரிரு நாட்களில் உங்கள் வங்கி கணக்குகளில் உரிய தொகை டெபாசிட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




















