தமிழ்நாடு
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் கிருத்திகா? உதயநிதி பேச்சு

அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் அனேகமாக எனது மனைவி கிருத்திகா உதயநிதி தான் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று நினைக்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு தனது மனைவியை சமூகப் பணியாற்றி வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் நடைபெற்ற உலக கழிப்பறை திருவிழாவில் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி கலந்துகொண்டார். மேலும் சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக கக்கூஸ் என்ற செயலியையும் அவர் தொடங்கி வைத்தார்.
அதன் பின்னர் பேசியபோது, ‘எனது மனைவி கிருத்திகாவின் சமூக பணியால் நான் அடுத்த தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் இருந்து மாற வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார் .
இந்த தொகுதியில் என்னை விட அதிகமாக எனது மனைவி தான் அதிகமாக சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றும் அதனால் எனக்கு ஒரு சின்ன பயம் உள்ளது என்றும் அடுத்த தேர்தலில் நான் வேறு தொகுதிக்கு மாற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற பயம் இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார் .
அந்த அளவுக்கு சிறப்பாக பணிகளை அவர் சிறப்பாக செய்து வருகிறார் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார். அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


















