சினிமா செய்திகள்
’ஆர்.ஆர்.ஆர்’ இரண்டாம் பாகம் கண்டிப்பாக உண்டு: மீண்டும் ராம்சரண் தேஜா- ஜூனியர் என்.டி.ஆர் தான்!

பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’ படம் கடந்த மார்ச் 25ஆம் தேதி வெளியாகி ஒன்பது நாட்களில் 800 கோடி ரூபாய் வசூல் செய்து உள்ளது என்பதும் ஆயிரம் கோடி ரூபாயை நிச்சயம் இந்தபடம் நெருங்கி விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் கண்டிப்பாக ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்றும் இந்த படத்தின் ஒன் லைன் கதையை ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா ஆகிய இருவரிடமும் கூறி சம்மதம் பெற்று விட்டதாகவும் கூறினார் .
ஆனால் அதே நேரத்தில் ராஜமவுலி அடுத்ததாக மகேஷ்பாபு படத்தை இயக்க இருக்கிறார் என்பதும் அந்த படத்தை முடித்துவிட்டுதான் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்ற தகவல் நமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.


















