இந்தியா
மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.03.2026

- திருச்சி ரயில்வே அலுவலக இந்தி பெயர் கருப்பு மை பூசி அழிப்பு. சர்ச்சைக்குரிய இந்தி பெயர் இன்று மாலை ரயில்வே நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.
- கப்பல் கட்டுதல் துறையில் முதலீடு ஈர்க்க நாட்டின் முதல் மாநிலமாக கப்பல் கட்டுதல் கொள்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. தூத்துக்குடியில் ஹூண்டாய் நிறுவனம் 2 பில்லியன் டாலர் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்க சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது குறிப்பிடத்தக்கது.
- ஹோர்மூஸ் நீரிணையில் சீனாவின் எண்ணெய் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளிப்பதாக ஈரான் அறிவிப்பு.
- ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் இதுவரை 1045 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானிய அரச நிறுவனம் தெரிவிப்பு.
- 2025 டிசம்பர் 31க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் ஓய்வூதிய பலன்களை பெற முடியவில்லை என ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை ரேணுகாதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் 3 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
- திமுக-காங்கிரஸ் இடையே சட்டப்பேரவை தொகுதிக்கான பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 28 சட்டப்பேரவை தொகுதிகள் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு.
- பீகார் முதலமைச்சர் பதவியிலிருந்து நிதிஷ்குமார் விலக உள்ளதாக தகவல். பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பார் என கூறப்படுகிறது. நிதிஷ்குமாருக்கு மாநிலங்களவை எம்பி சீட் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.













