ஆரோக்கியம்
உங்கள் உடலும் வயிறும் என்ன குப்பைத் தொட்டியா?.. ப்ளீஸ்.. இதையெல்லாம் இனிமேல் செய்யாதீங்க…

ஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் என்று வைத்துக்கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும். உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்திமூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றத் தள்ளும் போது அவர் உடனே வைத்தியரை நாடி “டொம்பெரிடன்” ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விடமாட்டேன் என்கிறானே என்று இரைப்பை ஒதுங்கி விடும். ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் வைத்தியரை நாடிச் செல்வார். அவரும் ஒரு “Loperamide” ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி “எமொக்சிலின்” ஒன்றை சாப்பிடுவார். நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது “தோல் மருந்து” வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசிவிடவே மூளை”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது brain tumor ஆக மாறும் அபாயம் உண்டு.
நமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளும்படி மூளை சொல்லும்.
உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.
உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? தாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா நம்மிடம் உள்ளது?
இதே போல் உடலுக்கு தேவையற்ற ஒரு விஷயம் உள்ளே நுழைந்து விட்டால் அதனை வெளியேற்றவே. உடல் சில முயற்சிகளை எடுக்கிறது. இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். நமது மூளை நம்மை அறியாமல் கையைக் கொண்டு சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
உடல் மொழியின் இத்தகைய செயல் நம் உடல் முழு ஆரோக்ய நிலையில் உள்ளதை காட்டுகிறது!
நம் உடல் கழிவுகளை வெளியேற்றுவது ஒரு அற்புத இறை செயல்!
மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
உடல் மொழியை புரிந்து கொள்ளுங்கள்! கண்டதை உள்ளே தள்ளாதீர்கள்.. அநாவசிய மருந்துகளை உட்கொள்ளாதீர்கள். நீடித்த ஆரோக்யத்தை அனுபவியுங்கள்…….!

















