இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 24.01.2026

- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.70 உயர்ந்து கிராம் ரூ.14620க்கும் சவரன் ரூ.116960க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.355க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.355000க்கும் விற்பனை ஆகிறது.
- கோவை வடவள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (27) என்பவர் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்துள்ளார். 10 மாத பெண் குழந்தை மற்றும் 4 வயது மகனுக்கு தாயான இவரின் தாய்ப்பால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
- தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்களான மாமல்லபுரம் மற்றும் கொடைக்கானலில் ரோப்கார் சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தனியார் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ நிறுவனம் ஒப்பந்தம் செய்யவுள்ளது.
- பாம்பன் பழைய தூக்குப் பாலம் அகற்றும் பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதால் 4 மாதங்களுக்கு கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு அவர்களுக்கு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு.
- சத்துணவு ஊழியர்கள் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஓய்வுதியம் ரூ.2000ல் இருந்து ரூ.3400 ஆக உயர்த்தி வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு
- நீதிமன்ற உத்தரவுப்படி அரசுப் பதவிகளுக்கு புதியதாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான முன்னுரிமை வழங்கப்படும் என்பதை உறதி செய்யும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் நிறைவேறியது.
- ஈரானை நோக்கிய அமெரிக்க போர்க்கப்பல் நகர்வால் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு விமானங்கள் ரத்து.
- உத்தரப்பிரதேசம் ஜான்புரில் மாற்றுத் திறனாளி கோட்டாவில் எம்பிபிஎஸ் சீட் கிடைக்க தனது காலின் 4 விரல்களை துண்டித்துக் கொண்ட இளைஞரால் அதிர்ச்சி.
- ஆந்திராவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக் யுடியுப் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தடை. அமைச்சர் நாரா லேகேஷ் அதிரடி
- ஜனவரி 26ல் தமிழகத்தில் புதியதாக 5 மாவட்டங்கள் உதயம் அறிவிக்கப்படும்.













