இந்தியா
திரைப்படத்தில் புதுமை… முகமற்ற வார்த்தைகள் அற்ற உலகின் முதல் திரைப்படம் ”மெட்டா”

இனி ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் சாதனை படைக்கும் ஒரு திரைப்படம் குறித்து பார்க்க இருக்கிறொம். அந்த வகையில் இந்த வார பயாஸ்கோப்பில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் “மெட்டா தி டேஸ்ஸிங் கேர்ல்“
சினிமா உலகம் பல்வேறு பரிணாமங்களை காலங்காலமாக அடைந்து வருகிறது. முதலில் பேசாத திரைப்படம், கருப்பு வெள்ளை திரைப்படம், பின்னர் பேசும்படமானது. வண்ணத் திரைப்படமானது. பேசும்படத்தில் பேசாத படத்தையும் நாம் பார்த்தோம். பல்வேறு கிராபிக்ஸ் மாயாஜாலங்களையும் கண்டோம். சமீபத்தில் வந்த ஏஐ தொழில்நுட்பம் ஒரு முழுத் திரைப் படத்தையே ஏஐ கொண்டு எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
இதுவரை எத்தனையோ தொழில்நுட்பங்களை புதுமைகளை புகுத்திய திரைப்படத்துறை இதுவரை எவரும் முகம் மறைத்து திரைப்படங்களை எடுத்ததில்லை என்ற அந்த புதுமையை “மெட்டா தி டேஸ்ஸிங் கேர்ல்“ திரைப்படம் செய்திருக்கிறது. இது ஒரு இந்திய திரைப்படம். இந்த படத்திற்கு தனி மொழி கிடையாது. ஆனால் திகில், மர்மம், சென்டிமென்ட் ஆகிய ஜானர்களை உள்ளடக்கியதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ஒரு ஒற்றை பெண் கதாபாத்திரம் முகம் காட்டாமல் வந்து போகிறது. எந்த வசனமும் கிடையாது. இப்படி ஒரு திரைப்படம் இதுவரை வந்ததில்லை என்கிறார்கள். அந்த பெருமையை படத்தின் ஆரம்பத்திலேயே “கார்டு“ போட்டு சொல்லியும் இருக்கிறார்கள்.
இந்த படத்தின் கதை இதுதான்.
மெட்டா என்ற இளம்பெண் தொல்பொருள் ஆய்வாளராக இருக்கிறார். அவர் தனது அகழ்வாராய்ச்சிக்காக மலைப்பகுதி ஒன்றில் பழைய இடிபாடுகளைக் கொண்ட கட்டிடத்தை காண்கிறார். அங்கேயே தங்கி தன்னுடைய ஆராய்ச்சியை தொடர்கிறாள். அப்போது அவளை அறியாமலேயே ஒரு சாபத்தில் சிக்கிக் கொள்கிறாள். அந்த சாபம் அவள் தலையை ஒரு மாயப்பானையில் சிக்க வைக்கிறது. அந்த பெண் அவளுக்கு எற்படும் இந்த அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க எடுக்கும் அறிவு சார்ந்த சாகச முயற்சிதான் படமாக விரிந்து நமது கண்களுக்கு விருந்தாக அமைகிறது.
முகத்தை காட்டாத ஒற்றைப் பெண் கதாபாத்திரத்தில் பிரணிதா வாக்சவுரே நடித்துள்ள இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளவர் பிரசாந்த் மாம்புல்லி.. இவர் கேரள மாநிலம் குருவாயுரைச் சேர்ந்தவர். இவர் மோகன்லாலை வைத்து “பகவான்“என்ற மலையாள படத்தை 19 மணி நேரத்தில் இயக்கி சாதனை படைத்து திரைத்துறைக்கு அறிமகமானவர் அடுத்ததாக கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து “சுக்ரீவா“ என்ற படத்தை 18 மணி நேரத்தில் இயக்கி தனது முந்தைய சாதனையை தானே முறியடித்து லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூட இந்த பெண்ணின் முகம் தெரியாதபடி தலையில் பானையை கவிழ்த்துதான் அறிமுகம் செய்தனர். கிறிஸ்துமஸ் அன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படம் முன்னதாகவே உலக திரைப்பட விழாக்களில் காட்சிப் படுத்தப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.
முகம் காட்டாத ஒற்றை கதாபாத்திம் உயிர் வாழும் இந்த திரைப்படம் உலகிலுள்ள அணைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் என்பதில் ஐயமில்லை.


















