Connect with us

இந்தியா

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் யாருக்கு லாபம்? யாருக்கு நஷ்டம்? – ஒரு அலசல் பார்வை

Published

on

நேற்று ஒன்றிய அரசு அறிவித்து அமலுக்கு வந்த ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்த நடவடிக்கைகளின் பயன்கள் எந்த அளவுக்கு சாதாரண பொதுமக்களை, ஏழை, எளியவர்களை சென்று சேரப் போகிறது என்று விரிவாக பார்ப்போமா?

2017 ம் ஆண்டு முதல் இருந்த 5% 12%, 18% மற்றும் 28% என்ற நான்கு அடுக்கு வரிவிதிப்பு முறை நேற்று முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்கு முறையாக மாற்றப்பட்டு அடுத்து வரும் பண்டிகை காலத்தை சேமிப்பு திருவிழாவாக மாற உள்ளதாக இந்திய பிரதமர் அறிவித்துள்ளார். ஆனால், இந்த வரிவிலக்கு மற்றும் வரிகுறைப்பு அணைத்து பொருட்களுக்கும் இருக்குமா என்ற எதிர்பார்ப்பும், இதன் பலன்கள் வாடிக்கையாளர்களை சென்று சேர்வதை கண்காணிக்க ஒன்றிய அரசிடம் உரிய திட்டம் இல்லாததும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

எந்த விலைகள் குறையும்?

குறிப்பாக பொட்டலங்களில் அடைக்கப்பட்ட நொறுக்குத் தீனிகள், காபி, நெய், வெண்ணெய், பனீர், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்களும், சோப்பு, ஷாம்பு, பற்பசை, மிதிவண்டிகள், ஜவுளி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் குறையும்.

97 விழுக்காடு மருந்துப் பொருட்களின் விலைகள் குறையும்.

ரூ.7500 வரை கட்டணமுள்ள தங்கும் விடுதி அறைகளுக்கும் 5% வரி மட்டுமே விதிக்கப்படும்.

32 அங்குலத்திற்கு மேற்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள், ஏசி, பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், சிறிய ரக கார்கள், 350 சிசிக்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள், சிமெண்ட் மற்றும் பிற கட்டுமான பொருட்களின் விலை குறையும்.

டிராக்டர் உள்ளிட்ட விவசாய இயந்திரங்கள் உபகரணங்கள் ஆகியவற்றின் விலை குறையும்.

இவ்வாறு பொருட்களின் விலை குறைவதால் நுகர்வோரின் வாங்கும் திறன் அதிகரித்து சில்லறை வர்த்தகம், இணையவழி வர்த்தகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக பண்டிகை சீசனில் விற்பனை அதிகரிப்பு மற்றும் செயல்திறன் அதிகரிப்பதோடு மக்களிடம் பணப்புழக்கம் கூடுதலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

என்னென்ன பாதகங்கள் ஏற்படும்?

பிஸ்கட் தயாரிப்பு உள்பட சில நிறுவனங்கள் ஜிஎஸ்டிக்கு ஏற்ப வரி குறைத்தால் சில்லறை பிரச்னை ஏற்படும் என்பதால் அதே விலைக்கு சற்று கூடுதலாக வழங்கலாம் என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சில நிறுவனங்கள் இந்த வரி விதிப்புக்கு ஏற்ப தங்கள் பொருள்களின் எடை மற்றும் தரங்களில் மாற்றத்தை ஏற்படுத்த உத்தேசித்திருப்பதால் இதனால் மக்கள் பாதிபடையாமல் அரசு கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

 

ஏற்கனவே கடும் நெருக்கடியை சந்தித்து வரும் தொழில்துறையினர் விலை குறைப்பால், மூலதனப்பொருட்களின் கொள்முதல் விஷயத்தில் ஏற்படும் இன்னல்களுக்கு தீர்வு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

நோட்டு புத்தக உற்பத்தியாளர்கள், பயிற்சி புத்தகங்கள், கிராப் புத்தகங்கள், நோட்டுப்புத்தகம் ஆகியவற்றிற்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பதால் இவை மலிவு விலையில் மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று அரசு கருதினாலும் நடைமுறையில் இது சாத்தியமில்லை என தெரிவிக்கின்றனர். நோட்டு புத்தகம் தயாரிக்க பயன்படும் காகிதங்களுக்கு ஜிஎஸ்டி உள்ளது. ஆனால், மூலப்பொருட்களுக்கு வரிவிலக்கு அறிவிக்கப்பட்டதால் இன்புட் வரி கோர முடியாது என்பதாலும், உற்பத்தி செலவு அதிகரித்திருப்பதாலும் விலை குறைய வாய்ப்பில்லை என்கின்றனர்.

இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு மற்றும் விலக்கு தொடர்பான மாற்றங்களை அஞ்சல் துறை மற்றும் காப்பீட்டுத் துறைக்கான சாஃப்ட்வேர்களில் மாற்றம் செய்ய கால அவகாசம் ஆகும் என்பதால் இத்துறைகளில் செப்டம்பர் இறுதி வரை ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 22க்கு பின்னர் காபபீடு பிரிமியம் தொகை செலுத்தினால் ஜிஎஸ்டி வராது என்று எண்ணி காப்பீடு பிரிமியம் செலுத்தாமல் இருந்த காப்பீடுதாரர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஜிஎஸ்டியால் கார்கள் விலை குறைக்கப்பட்டதால் பண்டிகை சீசன் விற்பனைக்காக ஏராளமான கார்களை செஸ்வரி செலுத்தி வாங்கி வைத்துள்ள டீலர்கள் அவற்றை நுகர்வோர் தலையில் சுமத்த முடியாது என்பதால் மாற்று வழி கோரி கையைப் பிசைந்த வண்ணம் உள்ளனர்.

சேவைப்பணிகள், தேர்வுக் கட்டணங்கள் ஆகியவற்றிற்கான வரிவிலக்கு மற்றும் குறைப்பு குறித்த தெளிவாள அறிவிப்புகள் இல்லாததால் குழப்பம் நிலவுகிறது.

பெட்ரோலிய பொருள்கள், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரிவிலக்கு மற்றம் குறைப்பு குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தங்ஙம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நடுத்தரக் குடும்பங்களின் திருமணங்களில் பல்வேறு சிக்கல்களை எற்படுத்தி வருகின்றன.

தீபாவளி பட்டாசுகள் மீதான வரிவிலக்கு மற்றும் குறைப்பு குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.

இரயில், பேருந்து, விமானம் மற்றும் கப்பல் பயணக் கட்டணங்களில் வரிவிலக்கு மற்றும் குறைப்பு குறித்தும் தெளிவான அறிவிப்புகள் இல்லை.

கடந்த எட்டு ஆண்டுகளாக கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி தொகை மக்களுக்கு திருப்பி வழங்ஙகப்படுமா என்ற மில்லியன் டாலர் கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த வரி சீர்திருத்தத்தால் இரண்டரை இலட்சம் கோடி மக்களுக்கு சேமிப்பு என்று பிரதமர் கூறியுள்ள போதிலும் 160 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒவ்வொரு குடிமகனுக்“கும் ரூ.119 மட்டுமே மிச்சம் ஆகப் போகிறது என்பது யானைப் பசிக்கு சோளப்பொரி போட்ட கதையாகத்தான் போகிறது.

ஆக மொத்தத்தில் இந்த வரிவிலக்கு மற்றும் குறைப்பால் சாமானிய ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பலன்கள் கிடைக்கப்போவதாக தெரியவில்லை.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா10 minutes ago

திருச்சி டூ நியு ஜலப்பைக்குரி புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை 17ம் தேதி தொடங்குகிறது

இந்தியா28 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 13.01.2026

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

தமிழ்பஞ்சாங்கம் 13 ஜனவரி 2026 | இன்றைய திதி, நட்சத்திரம், ராகு காலம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

13 ஜனவரி 2026 தினசரி ராசிபலன் | இன்றைய நாள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

இந்தியா15 மணி நேரங்கள் ago

கல்லில் காகிதங்களா!!! எழுத முடியுமா? செதுக்க வேண்டாமா?

இந்தியா15 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.01.2026

இந்தியா23 மணி நேரங்கள் ago

தேவதைகளின் இறக்கைகளுக்கு சக்தி கொடுக்கும் கனரா வங்கி – மகளிருக்கு 3 முத்தான சேமிப்புக் கணக்கு திட்டங்கள்

இந்தியா24 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 12.01.2026

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் | 12 ஜனவரி 2026 | Today Horoscope in Tamil

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய நீதிமன்ற செய்தி – பெற்றோர் உயில் எழுதாமல் இறந்தால் என்ன நடக்கும்?

ஆன்மீகம்6 நாட்கள் ago

பொங்கல் 2026: இந்த ஆண்டு தை பொங்கல் எப்போது? பொங்கல் வைக்க உகந்த நேரம் இதோ!

வணிகம்7 நாட்கள் ago

சென்னையில் முட்டை விலை 20 காசுகள் குறைவு: புதிய விலை அறிவிப்பு

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

ஜனநாயகன் படத்திற்கு ஏதோ ஒரு சான்றிதழ் கொடுக்கலாம்: சீமான் கருத்து

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்க டிமொனிடைஸேஷன் வந்தால் எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்?

சினிமா6 நாட்கள் ago

Bigg Boss Tamil 9: ஒரே நேரத்தில் இரு ரெட் கார்டு – பார்வதி, கம்ருதீனுக்கு சம்பளம் கிடையாதா? உண்மை என்ன?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தை சென்சார் செய்யும் புதிய தணிக்கை குழு.. எப்போது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு: யார் அளவுக்கு அதிகமாக கடன் பெறுகிறார்கள்?

வணிகம்6 நாட்கள் ago

இந்தியாவில் தங்கம் டிமொனிடைஸேஷன் நடந்தால் என்ன நடக்கும்?

சினிமா செய்திகள்7 நாட்கள் ago

இந்தியாவில் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் சென்சார் சான்றிதழ்கள் என்னென்ன? முழு விளக்கம்

தமிழ்நாடு7 நாட்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000: தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

Translate »